May 6, 2026
Thisaigal NewsYouTube
300 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு மோசடி: 'டான் ஸ்ரீ'யும் 'டத்தோ’வும் சிக்கினர்; 9.7 மில்லியன் ரிங்கிட் சொகுசு சொத்துக்கள் பறிமுதல்!
தற்போதைய செய்திகள்

300 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு மோசடி: 'டான் ஸ்ரீ'யும் 'டத்தோ’வும் சிக்கினர்; 9.7 மில்லியன் ரிங்கிட் சொகுசு சொத்துக்கள் பறிமுதல்!

Share:

கோலாலம்பூர், ஜனவரி.25-

சுமார் 300 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு நிதி முறைகேடு தொடர்பான விசாரணையில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மொத்தம் 9.7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொகுசு வாகனங்களையும் அசையாச் சொத்துக்களையும் பறிமுதல் செய்துள்ளது. இந்த மோசடி தொடர்பாகக் கடந்த வியாழக்கிழமை முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க 'டான் ஸ்ரீ' அந்தஸ்து கொண்ட நபர் இன்று விடுவிக்கப்பட்ட வேளையில், அதே வழக்கில் தொடர்புடைய 'டத்தோ' பட்டம் கொண்ட பெண்மணி நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டதாக ஆணையத்தின் நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.

தற்போது வரை 6 வீடுகள், ஒரு நிலப்பகுதி, இரண்டு சொகுசு வாகனங்கள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, 14 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டு அவற்றிலுள்ள பணத்தின் அளவு குறித்து வங்கி அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இதுவரை 10 சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களின் நலன் சார்ந்த இந்த ஊழல் விசாரணையை விரைந்து முடிக்க ஆணையம் உறுதியுடன் செயல்பட்டு வருவதாகவும் அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி உறுதிப்படுத்தியுள்ளார்.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்