லங்காவி,ஜன.10
லங்காவி, ஜாலான் சன்டிகுரா சாலை சந்திப்பில் நிகழ்ந்த விபத்தில் தமது சிற்றப்பாவுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த 11 வயது சிறுவன் உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று மாலை 5.16 மணியளவில் நிகழ்ந்தது.
டாயான் அமிருல் அஷாரி என்று அடையாளம் கூறப்பட்ட அந்த சிறுவன், 25 வயதுடைய தனது சிற்றப்பாவுடன் பயணம் செய்து கொண்டிருந்த போது, அவர்களின் மோட்டார் சைக்கில் மணல் லோரியுடன் மோதியதாக கூறப்படுகிறது.
இதில் கம்போங் பாடாங் வாஹிட்டை சேர்ந்த அந்த சிறுவனும், அவனது சிற்றப்பாவும் கடும் காயங்களுடன் லங்காவி சுல்தானா மலிஹா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிறுவன் சுயநினைவு திரும்பாமலேயே உயிரிழந்ததாக லங்காவி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபிஷரிமான் அஷாரி தெரிவித்தார்.








