Jun 30, 2026
Thisaigal NewsYouTube
Hatyai வெள்ளத்தில் சிக்கிய 6,300 மலேசியர்கள் நாடு திரும்பினர் – விஸ்மா புத்ரா தகவல்
தற்போதைய செய்திகள்

Hatyai வெள்ளத்தில் சிக்கிய 6,300 மலேசியர்கள் நாடு திரும்பினர் – விஸ்மா புத்ரா தகவல்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.26-

Hat Yai வெள்ளத்தில் சிக்கிய 6,300-க்கும் மேற்பட்ட மலேசியர்கள் தாய்லாந்திலிருந்து பாதுகாப்பாக மலேசியாவிற்குத் திரும்பியுள்ளதாக மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் பல மலேசியர்கள் அங்கு வெள்ளத்தில் சிக்கியுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் அங்குள்ள அடுக்குமாடி தங்கும் விடுதிகளில் தங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், விரைவில் அவர்களும் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சொங்க்லாவிலுள்ள மலேசியத் துணைத் தூதரகமும், பாங்கோக்கில் உள்ள மலேசியத் தூதரகமும் இந்த மீட்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து மலேசியாவிற்கு ஆதரவு அளித்து வருகின்றன.

இதற்கிடையில், வெள்ளத்தில் சிக்கிய வட மலேசிய பல்கலைக்கழகமான UUM-மின் 36 மாணவர்களும், 4 பேராசிரியர்களும், கடந்த 3 நாட்களாக சரியான உணவு இன்றி தவித்து வந்த நிலையில், அவர்கள் தற்போது தங்கும் விடுதி ஒன்றில் பாதுகாப்பாக இருப்பதாக அப்பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

Hatyai வெள்ளத்தில் சிக்கிய 6,300 மலேசியர்கள் நாடு திரும்ப... | Thisaigal News