May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மகளை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக தந்தை மீது குற்றச்சாட்டு

Share:

தெலுக் இந்தான், பிப்.5-

தனது 21 வயது மகளை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக தந்தை ஒருவர் தெலுக் இந்தான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்ட்டார்.

உடல் உழைப்புத் தொழிலாளியான 57 வயதுடைய அந்த நபர், நீதிபதி நோர்ஹமிசா சைபுடின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரு வீட்டில் தனது 21 வயது மகளை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக அந்த நபர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 30 ஆண்டு சிறை மற்றும் 10 பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News