Mar 21, 2026
Thisaigal NewsYouTube
முதியவரிடம் கொள்ளையிட்ட முகமூடி திருடர்கள்
தற்போதைய செய்திகள்

முதியவரிடம் கொள்ளையிட்ட முகமூடி திருடர்கள்

Share:

பகாங், மே 10-

பகாங், ஃபெல்டா சுங்கை தெக்காம் -மிலுள்ள வீடொன்றில் முகமூடி திருடர்கள் நுழைந்து, பெரியவர் ஒருவரை தாக்கியதுடன் 1,600 வெள்ளி மதிப்பிலான பொருட்களை கொள்ளையிட்டு சென்றனர்.

நேற்று இரவு 8 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 85 வயதுடைய அப்பெரியவரின் கைகள் ஒரு ரப்பர் குழாயால் கட்டப்பட்டதுடன் அவரின் வாயில் துணி அடைக்கப்பட்டு, படுக்கறைக்கு இழுத்து செல்லப்பட்டதாக தெரியப்படுகின்றது.

சந்தேகிக்கும் இரு முகமூடி திருடர்கள் வீட்டிற்குள் நுழைய முற்பட்ட வேளை, பாதிக்கப்பட்ட அப்பெரியவர் அவர்களை வழிமறித்ததை தொடர்ந்து இச்சம்பவம் நடந்திருப்பதாக மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் சுக்ரி முஹம்மது தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரிடமிருந்து அந்த முகமூடி திருடர்கள் 1,200 வெள்ளி ரொக்கப்பணம், வங்கி அட்டைகள் உட்பட கைப்பேசிகளை கொள்ளையிட்டு சென்றதாக சுக்ரி முஹம்மது கூறினார்.

மேல் சிகிச்சைக்காக பாதிக்கப்பட்டவர் ஜெரான்டுட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதுடன் சம்பந்தப்பட்ட முகமூடி திருடர்களை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக சுக்ரி முஹம்மது அறிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து