எல்மினா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீது டி.என்.ஏ மரபணு சோதனை வரும் திங்கட்கிழமை நடைபெறுமென்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
கிள்ளான் தேங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் சவக்கிடங்கில் 10 பேரின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை அடையாளம் காண்பதில் சற்று கால அவகாசம் தேவைப்படுவதாக ரஸாருதீன் குறிப்பிட்டார்.
விபத்து நடந்த கத்ரி நெடுஞ்சாலையில் விமானம் சிதறிக்கிடந்த பகுதியில் மனித உடல் தொடர்புடைய கிட்டத்தட்ட 200 அவயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக ஐ.ஜி.பி தெரிவித்தார். இந்த உடல் அவயங்கள் , 22 குடும்ப உறுப்பினர்களின் டி.என்.ஏ சோதனையின் மூலம் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்படுவர் என்று ரஸாருதீன் குறிப்பிட்டார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


