எல்மினா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீது டி.என்.ஏ மரபணு சோதனை வரும் திங்கட்கிழமை நடைபெறுமென்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
கிள்ளான் தேங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் சவக்கிடங்கில் 10 பேரின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை அடையாளம் காண்பதில் சற்று கால அவகாசம் தேவைப்படுவதாக ரஸாருதீன் குறிப்பிட்டார்.
விபத்து நடந்த கத்ரி நெடுஞ்சாலையில் விமானம் சிதறிக்கிடந்த பகுதியில் மனித உடல் தொடர்புடைய கிட்டத்தட்ட 200 அவயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக ஐ.ஜி.பி தெரிவித்தார். இந்த உடல் அவயங்கள் , 22 குடும்ப உறுப்பினர்களின் டி.என்.ஏ சோதனையின் மூலம் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்படுவர் என்று ரஸாருதீன் குறிப்பிட்டார்.

Related News

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.


