ஜோகூர்,ஜூலை 14-
இன்று காலை 7.0ஒ மணிக்கு , சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்த போலீஸ் அதிகாரி ஒருவரை கார் ஓட்டுனர் மோதியதில் அவ்வதிகாரியின் இடுப்பு பகுதி எலும்பு முறிவு மற்றும் முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளது என தெற்கு ஜோகூர் பாரு வட்டார போலீஸ் தலைவர் துணை கமிஸ்னர் Raub Selamat தெரிவித்தார்.
ஜோகூர்பாரு ஜலான் பன்தாய்,கிலோ மீட்டர் 3.6 யில், சாலை நெரிச்சலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டிருந்த 30 வயது போலீஸ் அதிகாரியின் மீது, குடிப்போதையில் கார் ஓட்டிக் கொண்டு வந்த ஓட்டுனர் மோதியதில் அவ்வதிகாரி காரின் மேல் விழுந்து தூக்கி எறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.








