Oct 22, 2025
Thisaigal NewsYouTube
ஆசியான் உச்சி மாநாடு: பாதுகாப்புப் பணிகளில் 10,000-த்திற்கும் மேல் போலீசார் நியமனம்!
தற்போதைய செய்திகள்

ஆசியான் உச்சி மாநாடு: பாதுகாப்புப் பணிகளில் 10,000-த்திற்கும் மேல் போலீசார் நியமனம்!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.22-

கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 47-வது ஆசியான் உச்சி மாநாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் இதுவரை இல்லாத அளவுக்கு சிக்கலானதாகவும், சவாலானதாகவும் இருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாநாட்டை தடையின்றி நடத்துவதற்காக சுமார் 10,000-த்திற்க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பணியில் ஈடுபடவுள்ளனர்.

எந்தவித அவசரநிலையையும் எதிர்கொள்ள தாங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறை இயக்குநர் டத்தோ ஶ்ரீ அஸ்மி அபு காசிம் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானோர் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் மாநில போலீஸ் துறைகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

பறிமுதலைத் தவிர்க்க லாரியைத் தீ வைத்துக் கொளுத்திய உரிமையாளர்!

பறிமுதலைத் தவிர்க்க லாரியைத் தீ வைத்துக் கொளுத்திய உரிமையாளர்!

தொலைத் தொடர்புச் சேவையைச் சீர்குலைத்ததாக இருவர் மீது குற்றச்சாட்டுகள்: RM300,000 அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு!

தொலைத் தொடர்புச் சேவையைச் சீர்குலைத்ததாக இருவர் மீது குற்றச்சாட்டுகள்: RM300,000 அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு!

பள்ளிகளில் பாதுகாப்பை அதிகரிக்கத் திட்டம்: 'அதிகக் கண்காணிப்பு' தேவைப்படும் பள்ளிகளைக் கண்டறியும் காவற்படை!

பள்ளிகளில் பாதுகாப்பை அதிகரிக்கத் திட்டம்: 'அதிகக் கண்காணிப்பு' தேவைப்படும் பள்ளிகளைக் கண்டறியும் காவற்படை!

எஸ்பிஎம் முடிவுகள் நிலைத்தன்மை: யுபிஎஸ்ஆர், பிடி3 நீக்கப்பட்டாலும் தேர்ச்சி விகிதத்தில் பாதிப்பில்லை!

எஸ்பிஎம் முடிவுகள் நிலைத்தன்மை: யுபிஎஸ்ஆர், பிடி3 நீக்கப்பட்டாலும் தேர்ச்சி விகிதத்தில் பாதிப்பில்லை!

பணத்தை மாற்ற வந்து வழிப்பறி: RM400 திருடிய ஈரானியருக்கு RM1,500 அபராதம்!

பணத்தை மாற்ற வந்து வழிப்பறி: RM400 திருடிய ஈரானியருக்கு RM1,500 அபராதம்!

கோலாலம்பூரில் கனமழை: மரம் விழுந்து 40 வயது மதிக்கத்தக்க ஆடவர் பலி, பெண் காயம்!

கோலாலம்பூரில் கனமழை: மரம் விழுந்து 40 வயது மதிக்கத்தக்க ஆடவர் பலி, பெண் காயம்!