நாட்டில் மிகப்பெரிய தொழிற்சங்கமான எம்.டி.யு.சி எனப்படும் மலேசிய தொழிற்சங்க காங்கிரஸின் தேர்தல் முடிவு செல்லாது என்று ஷா ஆலம் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்த மிகப்பெரிய தொழிலாளர் அமைப்பு தனது சட்டத்திட்டங்களை பின்பற்றி, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தனது தேர்தலை நடத்தவில்லை என்று நீதித்துறை அணையாளர் சூங் யோவ் சோய் தமது தீர்ப்பில் அறிவித்துள்ளார். எம்.டி.யூ.சி.யின் தேர்தல் கடந்த ஆண்டு ஜுலை 2 மற்றும் 3 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்றது. தேர்தல் முடிவு ரத்து செய்யப்பட்டது மூலம் அந்த தேர்தலில் எம்.டி.யூ.சி. பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவி வகிப்பும் செல்லாது என்று நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு


