நாட்டில் மிகப்பெரிய தொழிற்சங்கமான எம்.டி.யு.சி எனப்படும் மலேசிய தொழிற்சங்க காங்கிரஸின் தேர்தல் முடிவு செல்லாது என்று ஷா ஆலம் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்த மிகப்பெரிய தொழிலாளர் அமைப்பு தனது சட்டத்திட்டங்களை பின்பற்றி, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தனது தேர்தலை நடத்தவில்லை என்று நீதித்துறை அணையாளர் சூங் யோவ் சோய் தமது தீர்ப்பில் அறிவித்துள்ளார். எம்.டி.யூ.சி.யின் தேர்தல் கடந்த ஆண்டு ஜுலை 2 மற்றும் 3 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்றது. தேர்தல் முடிவு ரத்து செய்யப்பட்டது மூலம் அந்த தேர்தலில் எம்.டி.யூ.சி. பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவி வகிப்பும் செல்லாது என்று நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News

சொத்துப் பிரகடன வழக்கு: Ismail Sabri-க்கு எதிரான குற்றச்சாட்டு ஆகஸ்ட் 27-க்கு ஒத்திவைப்பு

260 மலேசியா ஏர்லைன்ஸ் விமானிகளுக்கும் கட்டாய போதைப் பொருள் பரிசோதனை: மலேசிய விமானப் போக்குவரத்து குழுமம் அதிரடி உத்தரவு

பச்சிளம் குழந்தையைக் கொலை செய்ததாக 19 வயது மாணவி மீது கொலைக் குற்றச்சாட்டு

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 Lenova Tablet கைக்கணினி வழங்கப்பட்டது

பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா தற்காலிக விடுப்பு


