நாட்டில் மிகப்பெரிய தொழிற்சங்கமான எம்.டி.யு.சி எனப்படும் மலேசிய தொழிற்சங்க காங்கிரஸின் தேர்தல் முடிவு செல்லாது என்று ஷா ஆலம் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்த மிகப்பெரிய தொழிலாளர் அமைப்பு தனது சட்டத்திட்டங்களை பின்பற்றி, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தனது தேர்தலை நடத்தவில்லை என்று நீதித்துறை அணையாளர் சூங் யோவ் சோய் தமது தீர்ப்பில் அறிவித்துள்ளார். எம்.டி.யூ.சி.யின் தேர்தல் கடந்த ஆண்டு ஜுலை 2 மற்றும் 3 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்றது. தேர்தல் முடிவு ரத்து செய்யப்பட்டது மூலம் அந்த தேர்தலில் எம்.டி.யூ.சி. பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவி வகிப்பும் செல்லாது என்று நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


