நாட்டில் மிகப்பெரிய தொழிற்சங்கமான எம்.டி.யு.சி எனப்படும் மலேசிய தொழிற்சங்க காங்கிரஸின் தேர்தல் முடிவு செல்லாது என்று ஷா ஆலம் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்த மிகப்பெரிய தொழிலாளர் அமைப்பு தனது சட்டத்திட்டங்களை பின்பற்றி, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தனது தேர்தலை நடத்தவில்லை என்று நீதித்துறை அணையாளர் சூங் யோவ் சோய் தமது தீர்ப்பில் அறிவித்துள்ளார். எம்.டி.யூ.சி.யின் தேர்தல் கடந்த ஆண்டு ஜுலை 2 மற்றும் 3 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்றது. தேர்தல் முடிவு ரத்து செய்யப்பட்டது மூலம் அந்த தேர்தலில் எம்.டி.யூ.சி. பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவி வகிப்பும் செல்லாது என்று நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News

மலேசியாவில் இன்று மாலை 7 மணி வரை பலத்த மழை எச்சரிக்கை!

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்


