நாட்டில் மிகப்பெரிய தொழிற்சங்கமான எம்.டி.யு.சி எனப்படும் மலேசிய தொழிற்சங்க காங்கிரஸின் தேர்தல் முடிவு செல்லாது என்று ஷா ஆலம் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்த மிகப்பெரிய தொழிலாளர் அமைப்பு தனது சட்டத்திட்டங்களை பின்பற்றி, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தனது தேர்தலை நடத்தவில்லை என்று நீதித்துறை அணையாளர் சூங் யோவ் சோய் தமது தீர்ப்பில் அறிவித்துள்ளார். எம்.டி.யூ.சி.யின் தேர்தல் கடந்த ஆண்டு ஜுலை 2 மற்றும் 3 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்றது. தேர்தல் முடிவு ரத்து செய்யப்பட்டது மூலம் அந்த தேர்தலில் எம்.டி.யூ.சி. பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவி வகிப்பும் செல்லாது என்று நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


