Aug 10, 2026
Thisaigal NewsYouTube
கோரத் தீ விபத்து,  பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 2,500 ரிங்கிட் உதவித் தொகை,  சேதமடைந்த வீடுகளில் உரிமையாளர்களுக்கு தலா 5 ஆயிரம் ரிங்கிட் - பிரதமர் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

கோரத் தீ விபத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 2,500 ரிங்கிட் உதவித் தொகை, சேதமடைந்த வீடுகளில் உரிமையாளர்களுக்கு தலா 5 ஆயிரம் ரிங்கிட் - பிரதமர் அறிவிப்பு

Share:

சுபாங் ஜெயா, ஏப்ரல்.01-

சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸில் இன்று காலையில் ஏற்பட்ட எரிவாயு குழாய் வெடிப்பு தீச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 2,500 ரிங்கிட் உதவித் தொகை வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

அதேவேளையில் இந்த தீச் சம்பவத்தினால் சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு தலா 5 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

மேலும் சேதமுற்ற வீடுகளை மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம் மற்றும் பெட்ரோனாஸ் ஆகியவை கூட்டாக இணைந்து சீர்படுத்திக் கொடுக்கும் என்று பிரதமர் உத்தரவாதம் அளித்தார்.

தீ நிகழ்ந்த பகுதியை இன்று மாலையில் நேரில் வருகை தந்து பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஸ்ரீ அன்வார் இதனைத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சீரமைப்பதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கும். அரசாங்க ஏஜென்சிகள் அனைத்தும், முழு வீச்சில் இதற்கு ஒத்துழைப்பு நல்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டவர்களை மீட்பதிலும், அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதிலும், மருத்துவ சிகிச்சை வழங்குவதிலும், நிவாரணம் அளிப்பதிலும் துணை நின்ற அரசாங்க ஏஜென்சிகளுக்கும், வழிபாட்டுத் தலங்களுக்கும் பிரதமர் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி