Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மனைவியைக் கொன்றதாக கொலை வழக்கு: மொழி தெரியாததால் ஒத்திவைப்பு
தற்போதைய செய்திகள்

மனைவியைக் கொன்றதாக கொலை வழக்கு: மொழி தெரியாததால் ஒத்திவைப்பு

Share:

ஈப்போ, அக்டோபர்.03-

கடந்த திங்கட்கிழமை பேரா, செம்மோர், கம்போங் கோல குவாங்கில் உள்ள ஒரு வீட்டில் தனது மனைவியைக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு மியன்மார் பிரஜைக்கு எதிரான கொலை வழக்கை ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.

37 வயது மியோ நாயிங் சோ என்ற அந்த மியன்மார் பிரஜை, தனக்கு எதிரான குற்றச்சாட்டின் தன்மையைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில், மொழிப்பெயர்ப்பாளர் ஒருவரை நியமிப்பதற்கு ஏதுவாக இக்கொலை வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக மாஜிஸ்திரேட் S. புனிதா தெரிவித்தார்.

அந்த மியன்மார் பிரஜை, 28 வயதுடைய தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராற்றில் அவரைக் கத்தியால் குத்திக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், மரணத் தண்டனை அல்லது கூடியபட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த மியன்மார் பிரஜை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

இக்கொலை வழக்கின் புலன் விசாரணை அதிகாரியான ஈப்போ போலீஸ் தலைமையகத்தை சேர்ந்த ஏசிபி ஜெயன் சுப்பிரமணியமும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்