Mar 20, 2026
Thisaigal NewsYouTube
மனைவியைக் கொன்றதாக கொலை வழக்கு: மொழி தெரியாததால் ஒத்திவைப்பு
தற்போதைய செய்திகள்

மனைவியைக் கொன்றதாக கொலை வழக்கு: மொழி தெரியாததால் ஒத்திவைப்பு

Share:

ஈப்போ, அக்டோபர்.03-

கடந்த திங்கட்கிழமை பேரா, செம்மோர், கம்போங் கோல குவாங்கில் உள்ள ஒரு வீட்டில் தனது மனைவியைக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு மியன்மார் பிரஜைக்கு எதிரான கொலை வழக்கை ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.

37 வயது மியோ நாயிங் சோ என்ற அந்த மியன்மார் பிரஜை, தனக்கு எதிரான குற்றச்சாட்டின் தன்மையைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில், மொழிப்பெயர்ப்பாளர் ஒருவரை நியமிப்பதற்கு ஏதுவாக இக்கொலை வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக மாஜிஸ்திரேட் S. புனிதா தெரிவித்தார்.

அந்த மியன்மார் பிரஜை, 28 வயதுடைய தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராற்றில் அவரைக் கத்தியால் குத்திக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், மரணத் தண்டனை அல்லது கூடியபட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த மியன்மார் பிரஜை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

இக்கொலை வழக்கின் புலன் விசாரணை அதிகாரியான ஈப்போ போலீஸ் தலைமையகத்தை சேர்ந்த ஏசிபி ஜெயன் சுப்பிரமணியமும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

மனைவியைக் கொன்றதாக கொலை வழக்கு: மொழி தெரியாததால் ஒத்திவைப்பு | Thisaigal News