Feb 24, 2026
Thisaigal NewsYouTube
நாடற்ற குழந்தைகளுக்கும் அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை வழங்கப்படும்- சுகாதார அமைச்சர் தகவல்
தற்போதைய செய்திகள்

நாடற்ற குழந்தைகளுக்கும் அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை வழங்கப்படும்- சுகாதார அமைச்சர் தகவல்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.24-

அவசரநிலைகள் மற்றும் உயிருக்கு ஆபத்தான சந்தர்ப்பங்களில், மலேசியாவில் வாழும் நாடற்ற குழந்தைகளை, அரசாங்கப் பொது மருத்துவமனைகள் ஒருபோதும் கைவிடாது என்று சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான அடிப்படையில் நாடற்ற குழந்தைகள் உட்பட அனைவருக்கும் உரிய சிகிச்சைகள் கிடைக்க சுகாதார அமைச்சு விரும்புவதாகவும் நாடாளுமன்றத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கக் கொள்கையைப் பொறுத்த வரையில், உயிர்களைக் காப்பாற்றுவதும், தேவைப்படுவோருக்கு உரிய சிகிச்சை வழங்குவதும் ஆகும் என்றும் ஸுல்கிஃப்லி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், 2014-ஆம் ஆண்டு மருத்துவக் கட்டண ஆணையின் படி, மலேசியாவில் குடியுரிமை உள்ளவர்களுக்கும், குடியுரிமை இல்லாதவர்களுக்கும் இடையே, கட்டணங்களில் வேறுபாடு இருக்கும் என்பதை ஸுல்கிஃப்லி சுட்டிக் காட்டியுள்ளார்.

நாடற்றவர்களுக்கு, வெளிநாட்டினருக்கான கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் ஸுல்கிஃப்லி தனது எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்.

Related News

மாமன்னருடன் பிரதமர் அன்வார் சந்திப்பு - முக்கிய விவகாரங்கள் குறித்து  கலந்துரையாடினர்

மாமன்னருடன் பிரதமர் அன்வார் சந்திப்பு - முக்கிய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினர்

செந்தூலில் பெண்ணிடம் பாலியல் சீண்டல் - இந்தியாவைச் சேர்ந்த ஆடவருக்கு போலீஸ் வலை வீச்சு

செந்தூலில் பெண்ணிடம் பாலியல் சீண்டல் - இந்தியாவைச் சேர்ந்த ஆடவருக்கு போலீஸ் வலை வீச்சு

அதிகாரத் துஷ்பிரயோகம் செய்ததாக திரங்கானு ஆட்சிக்குழு உறுப்பினர் ஹனாஃபியா மீது குற்றம் சாட்டப்பட்டது

அதிகாரத் துஷ்பிரயோகம் செய்ததாக திரங்கானு ஆட்சிக்குழு உறுப்பினர் ஹனாஃபியா மீது குற்றம் சாட்டப்பட்டது

மக்கள் அரசாங்கத்திடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வது முக்கியம்

மக்கள் அரசாங்கத்திடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வது முக்கியம்

10 ஆண்டுகளில் பதிவான பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் சிலாங்கூர் முதலிடம் - நாடாளுமன்றத்தில் தகவல்

10 ஆண்டுகளில் பதிவான பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் சிலாங்கூர் முதலிடம் - நாடாளுமன்றத்தில் தகவல்

கோலாலம்பூர்  ஊராட்சி மன்றத் தேர்தல் குறித்த ஆய்வு: மார்ச் இறுதி வரை தொடரும் என ஹன்னா இயோ தகவல்

கோலாலம்பூர் ஊராட்சி மன்றத் தேர்தல் குறித்த ஆய்வு: மார்ச் இறுதி வரை தொடரும் என ஹன்னா இயோ தகவல்