தாமான் பன்டான் ஜெயா - வில் உள்ள மளிகை கடைக்கு முன் டிசம்பர் 10 ஆம் தேதி வெளிநாட்டு பிரஜைகளுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையில் ஒருவர் மரணமுற்றதை குறித்து அந்நிய நாட்டவருக்கு எதிரான குற்றச்சாட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.
26 வயதுடைய அபு போஷோர் -விற்கு மலாய் மொழியில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டு புரியவில்லை என்று கூறியதை தொடர்ந்து மஜிஸ்திரேட் நோர்மைசான் ரம்லி இத்தீர்ப்பை வழங்கினார்.
குற்றச்சாட்டப்பட்ட அந்நபருக்கு மியன்மார் மற்றும் Rohingya மொழி மட்டுமே தெரியவிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மொழிபெயர்ப்பாளர் சேவைகளை வழங்கும் நோக்கத்திற்காக வழக்கை அடுத்த வருடம் மார்ச் 6 ஆம் தேதி தள்ளி வைத்திருப்பதாக நோர்மைசான் கூறினார்.








