Mar 12, 2026
Thisaigal NewsYouTube
சுங்கைப்பட்டாணி 3அடி உயரத்திற்கு வெள்ளம் மக்கள் பாதிப்பு
தற்போதைய செய்திகள்

சுங்கைப்பட்டாணி 3அடி உயரத்திற்கு வெள்ளம் மக்கள் பாதிப்பு

Share:

கெடா சுங்கைப்பட்டாணியில் கனத்த மழையினால் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறின. இதில் 20 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டதாக சுங்கைப்பட்டாணி தீயணைப்புப் படையின் தலைவர் இஸ்மாயில் பின் ஹஜி முகமட் ஜைன் தெரிவித்தார்.

நேற்று இரவு 8.00 மணி அளவில் சுங்கைப்பட்டாணி தீயணைப்பு அலுவலகத்திற்கு அவசர அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் ஜாலான் கோலாகெட்டில் சுங்கைப்பட்டாணியிலுள்ள சில இடங்களில் வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பத்தாகவும், அவர்களுக்கு உதவிகள் தேவை என்ற தகவலை பெறப்பட்டதாகவும் இஸ்மாயில் கூறினார் .

தொடர்ந்து , சுங்கைப்பட்டாணி தீயணைப்பு அலுவலத்திலிருந்து 10 தீயணைப்பு வீரர்கள் ஒரு படகு, ஹய்லாக் வாகனத்துடன் சம்பவம் இடத்திற்கு விரைந்தனர். வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் நீரின் மட்டம் 3 அடி வரை உயர்ந்திருந்தது. இதில் ஏறக்குறைய 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6 ஆண்கள் , 8 பெண்கள் மற்றும் 6 சிறுவர்கள் அடங்குவர் .

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டப்பட்டதாக இஸ்மாயில் தெரிவித்தார்.

Related News

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.