Apr 18, 2026
Thisaigal NewsYouTube
கலிமந்தன் ஹெலிகாப்டர் விபத்து: முன்னாள் கேஎல்கே குழுமத்தின் இயக்குநர் பலி
தற்போதைய செய்திகள்

கலிமந்தன் ஹெலிகாப்டர் விபத்து: முன்னாள் கேஎல்கே குழுமத்தின் இயக்குநர் பலி

Share:

இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தன் பகுதியில் கடந்த வியாழக்கிழமை நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மலேசியர், பேட்ரிக் கீ என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர் கோலாலம்பூர் கெப்பாங் குழுமத்தின் முன்னாள் தோட்ட இயக்குநராக பணியாற்றியவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த தகவலை தங்கா பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பக்ரி ஜமாலுதீன் தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தாம் பேட்ரிக் கீயின் தலைமையின் கீழ் கோலாலம்பூர் கெப்பாங் பெர்ஹாட் நிறுவனத்தில் பணியாற்றியதாக பக்ரி குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், அவர் மிகுந்த மரியாதைக்குரிய தலைவர் என்றும், அவரது அர்ப்பணிப்பு, ஞானம் மற்றும் உறுதிப்பாடு, அவருடன் பணியாற்றிய பலரின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் பக்ரி தமது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.

மேற்கு கலிமந்தன் மாநிலத்தில் நேற்று வியாழக்கிழமை காலை புறப்பட்ட ‘மேத்யூ ஏர் நுசந்தாரா’ என்ற ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதில் அதில் பயணம் செய்த 8 பேரும் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

இந்திய வர்த்தர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

இந்திய வர்த்தர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

சம்பள குறைப்பை அமல்படுத்த அமைச்சரவை தயாராகிறது - அமைச்சர் தகவல்

சம்பள குறைப்பை அமல்படுத்த அமைச்சரவை தயாராகிறது - அமைச்சர் தகவல்

ஈரானுக்கு புதன்கிழமை வரை டிரம்ப் காலக்கெடு: குண்டுவீச்சு மீண்டும் தொடங்க வாய்ப்பு

ஈரானுக்கு புதன்கிழமை வரை டிரம்ப் காலக்கெடு: குண்டுவீச்சு மீண்டும் தொடங்க வாய்ப்பு

கைரி, ஹிஷாமுடின் உட்பட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் அம்னோவில் சேர்க்கப்பட்டனர்

கைரி, ஹிஷாமுடின் உட்பட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் அம்னோவில் சேர்க்கப்பட்டனர்

மலாக்கா நீரிணையைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் / அரசாங்கத்திற்கு பெரிக்காத்தான் வலியுறுத்து

மலாக்கா நீரிணையைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் / அரசாங்கத்திற்கு பெரிக்காத்தான் வலியுறுத்து

1 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய்களுடன் ஓசன் தண்டர் கப்பல் மலேசியாவை வந்தடைந்ததது

1 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய்களுடன் ஓசன் தண்டர் கப்பல் மலேசியாவை வந்தடைந்ததது