Aug 3, 2026
Thisaigal NewsYouTube
வறிய நிலை மக்களுக்கு மாதாந்திர சிறப்பு ரொக்கத் தொகை உதவி  அரசாங்கம் பரிசீலனை
தற்போதைய செய்திகள்

வறிய நிலை மக்களுக்கு மாதாந்திர சிறப்பு ரொக்கத் தொகை உதவி அரசாங்கம் பரிசீலனை

Share:

மிக ஏழ்மை நிலையில் உள்ள மக்கள், வறுமைக்கோட்டிலிருந்து மீள்வதற்கு அவர்களுக்கு மாதாந்திர சிறப்பு ரொக்கத்தொகை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

வயது, உடல் நிலை காரணமாக வேலை செய்து வருமானத்தை ஈட்டி, குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத அளவிற்கு வறிய நிலையில் உள்ளவர்களுக்கு இந்த மாதாந்திர ரொக்க உதவித் தொகை வழங்கப்படுவதற்கான பரிதுரையை அரசாங்கம் கொண்டுள்ளது.

ஏழை மக்களை வறுமைக்கோட்டிலிருந்து மீட்க வேண்டும் என்பதற்காக அரசாங்கம் கொண்டுள்ள முக்கிய திட்டங்களில் இந்த ரொக்க உதவித் திட்டமும் அடங்கும் என்று பிரதமர் விளக்கினார்.

இன்று புத்ராஜெயாவில் தேசிய பொருளாதார நடவடிக்கை மன்றக்கூட்டத்திற்கு தலைமையேற்றப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.

Related News

Marudi-யில் 18.7 அடி நீள ராட்சத முதலை பிடிபட்டது - வேட்டைக் குழு சாதனை

Marudi-யில் 18.7 அடி நீள ராட்சத முதலை பிடிபட்டது - வேட்டைக் குழு சாதனை

2027 வரவு செலவுத் திட்டம்: குறு, சிறு தொழில் வளர்ச்சிக்காக நாடு முழுவதும் ஆலோசனை தொடங்கியது

2027 வரவு செலவுத் திட்டம்: குறு, சிறு தொழில் வளர்ச்சிக்காக நாடு முழுவதும் ஆலோசனை தொடங்கியது

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்