Jun 29, 2026
Thisaigal NewsYouTube
தஞ்சோங் தோக்கோங் குடிசைப்பகுதிகளில் தீவிபத்து: 23 பேர் உயிர் தப்பினர்
தற்போதைய செய்திகள்

தஞ்சோங் தோக்கோங் குடிசைப்பகுதிகளில் தீவிபத்து: 23 பேர் உயிர் தப்பினர்

Share:

ஜார்ஜ் டவுன், மார்ச் 03-

தஞ்சோங் தோக்கோங் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில், நான்கு ஒற்றை தள குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாகின.

தீ பற்றியதை அறிந்தவுடன், அவற்றில் வசித்து வந்த 23 குடியிருப்பாளர்கள், உடுத்த ஆடைகளை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறி உயிர் தப்பியுள்ளனர்.

இத்தீவிபத்து குறித்து இன்று அதிகாலை 3.14 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை உதவி இயக்குநர் ஜான் சகுன் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

அதிகாலை 6 மணி வரையில் தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றதாகவும், மற்ற வீடுகளில் தீ பரவாமல் தடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விபத்தில் யாருக்கும் காயமோ, உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை என்பதையும் ஜான் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related News

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு