May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மைசெல் திட்டத்தின் வாயிலாக 2,522 பேர் அடையாள ஆவணங்கள் பெற்றனர்

Share:

ஷா ஆலாம், ஜன.23-

சிலாங்கூர் மாநில அரசின் மைசெல் எனப்படும் அடையாள ஆவண உதவி மையத் திட்டத்தின் வாயிலாக இதுவரை 2,522
பேர் அடையாள ஆவணங்களைப் பெற்றுள்ளனர்.இந்த அமைப்பின் முயற்சியால் அவர்கள் அனைவருக்கும் பிறப்பு பத்திரம்,
குடியுரிமை, தத்தெடுப்பு உள்ளிட்ட ஆவணங்கள் கிடைக்கப்பெற்றதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு கூறினார்.

அடையாள ஆவணங்கள் தொடர்பில் மொத்தம் 6,545 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்ற வேளையில் அவற்றில் 2,522 விண்ணப்பங்களுக்கு தீர்வுகாணப்பட்டன. அங்கீரிக்கப்பட்டவற்றில் குடியுரிமை தொடர்பான 854விண்ணப்பங்களும் பிறப்பு பத்திரம் தொடர்பான 616 விண்ணப்பங்களும்தத்தெடுப்பு தொடர்பான 560 விண்ணப்பங்களும் அடங்கும் என அவர்
சொன்னார்.

அடையாளப் பத்திரங்களைப் பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்குவோரில் பலர் தேர்வை எழுதும் மாணவர்களாக உள்ளதால் அவர்களுக்கு உதவும்நோக்கில் இத்திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தி வருகிறது.

குடிநுழைவுத் துறை அல்லது உள்துறை அமைச்சின் அதிகாரத்தில்தலையிடும் நோக்கம் மாநில அரசுக்கு கிடையாது. அடையாளப்பத்திரங்களைப் பெறுவதற்கு தேவையான அடிப்படை உதவிகளை வழங்கும் பணிகளை மட்டுமே நாங்கள் மேற்கொள்கிறோம் என்றார் அவர்.

மைசெல் முயற்சியால் அடையாள ஆவணங்களைப் பெற்ற 22 பேருக்கு இங்குள்ள தமது அலுவலகத்தில் நடைபெற்ற அடையாளப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

அடையாள ஆவணங்களைப் பெறும் விஷயத்தில் அலட்சியம் காட்டவேண்டாம் என பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு ஆலோசனை கூறிய அவர், முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் பலரது விண்ணப்பங்கள் இன்னும் அங்கீரிக்கப்படாமல் உள்ளதைசு சுட்டிக்காட்டினார்.

அடிப்படையான ஆவணங்கள் இல்லாததால் சிலர் டி.என்.ஏ. எனப்படும் மரபணு சோதனைக்கு உட்படும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. மேலும் வழங்கப்படும் ஆவணங்களைப் பொறுத்து விண்ணப்பங்களை அங்கீகரிப்பதற்கு ஒன்று முதல் ஏழாண்டுகள் வரை தேவைப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்