May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பாதுகாப்பு எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் கடலில் விளையாடுகின்றனர்

Share:

ஜன. 19-

Teluk Cempedak கடற்கரையில், ஆபத்தை உணர்த்தும் மூன்று சிவப்பு கொடிகள் ஏற்றப்பட்டிருந்தும் சில பார்வையாளர்கள் பாதுகாப்பு எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் கடலில் விளையாடுகின்றனர். வடகிழக்கு பருவமழையின் காரணமாக வீசும் பலத்த காற்றையும் பெரிய அலைகளையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. அதிகாரிகள் தொடர்ந்து எச்சரித்தும், சிலர் அலட்சியமாக கடலில் இறங்கினர். சில தந்தைகள் தங்கள் குழந்தைகளையும் கடலில் விளையாட அழைத்து வந்தனர், இது ஆபத்தை விளைவிக்கும் செயலாகும் என பகாங் மாநில தற்காப்புப் படையின் இயக்குநர் Che Adam A Rahman தெரிவித்தார்.

Teluk Cempedak மட்டுமல்லாமல், பெக்கான், ரொம்பின் கடற்கரைகளுக்கும் வரும் பார்வையாளர்கள் தற்போதைய மோசமான வானிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். குறிப்பாக, பெரிய அலைகள் இருக்கும் போது, கடற்கரையில் இருப்பதையும், நீர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். வடகிழக்கு பருவமழை மார்ச் மாதம் வரை நீடிக்கும் என்பதால், பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று Che Adam குறிப்பிட்டார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்