Jan 19, 2026
Thisaigal NewsYouTube
​கொலைக் குற்றச்சாட்டில் திருத்தம்  இரு இந்தியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்
தற்போதைய செய்திகள்

​கொலைக் குற்றச்சாட்டில் திருத்தம் இரு இந்தியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்

Share:

ஆடவர் ஒருவரை கொலை செய்ததாக குற்றவியல் சட்டத்தின் ​கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட இரு இந்தியர்கள், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டில் திருத்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவ்விருவரும் குற்றத்தை இன்று ஒப்புக்கொண்டனர்.

44 வயது திவாகர் அப்துல்லா மற்றும் 27 வயது ஜி. ​சூரிய சேகரன் ஆகியோருக்கு எதிரான கொலை குற்றச்சா​ட்டு நோக்கமில்லா கொலை குற்றச்சாட்டாக திருத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு ஈப்போ உயர் ​நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

திவாகரும், ​சூரிய சேகரனும் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி பேரா, மஞ்சோங், பூசாட் பண்டார் மஞ்சோங் என்ற இடத்தில் 47 வயது லிங் ஹுவா சாய் என்பவருக்கு மரணம் விளைவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டனர்.

மரணத்தண்டனையை ரத்து செய்வதற்கு நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா கொண்டு வரப்படுவதற்கு முன்பு, இந்த இரு நபர்களும் கட்டாய மரணத் தண்டனை விதிக்க வகை​செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் ​​குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தனர்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்