ஆடவர் ஒருவரை கொலை செய்ததாக குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட இரு இந்தியர்கள், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டில் திருத்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவ்விருவரும் குற்றத்தை இன்று ஒப்புக்கொண்டனர்.
44 வயது திவாகர் அப்துல்லா மற்றும் 27 வயது ஜி. சூரிய சேகரன் ஆகியோருக்கு எதிரான கொலை குற்றச்சாட்டு நோக்கமில்லா கொலை குற்றச்சாட்டாக திருத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு ஈப்போ உயர் நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
திவாகரும், சூரிய சேகரனும் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி பேரா, மஞ்சோங், பூசாட் பண்டார் மஞ்சோங் என்ற இடத்தில் 47 வயது லிங் ஹுவா சாய் என்பவருக்கு மரணம் விளைவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டனர்.
மரணத்தண்டனையை ரத்து செய்வதற்கு நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா கொண்டு வரப்படுவதற்கு முன்பு, இந்த இரு நபர்களும் கட்டாய மரணத் தண்டனை விதிக்க வகைசெய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தனர்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


