Apr 1, 2026
Thisaigal NewsYouTube
திறப்பு விழா கண்டது கே.பி.ஆர். வாழையிலை உணவகம்
தற்போதைய செய்திகள்

திறப்பு விழா கண்டது கே.பி.ஆர். வாழையிலை உணவகம்

Share:

கிள்ளான்,டிச. 13-
கடந்த 23 ஆண்டு காலமாக தரமான மற்றும் சிறப்பான உணவு கேட்டரிங் சேவையில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு, மூன்று உணவகங்களை வெற்றிகரமாக நடத்தி வரும் கண்ணுசாமியை உரிமையாளராக கொண்ட KPR Food Caterers நிறுவனம், தங்களின் நான்காவது உணவகமான KPR Banana Leaf Restaurant உணவகத்தை எண். 75, Jalan Bendahara 45, Taman Sejati, Kota Raja, கிள்ளான் என்ற முகவரியில் அதிகாரப்பூர்வமாக திறந்துள்ளது.

டைனமிக், ஏழாம் உணர்வு விழித்தொழுதல் பயிற்சியின் மூலம் ஆற்றல் வாய்ந்த பலரை உருவாக்கியவரும், உணவக உரிமையாளர் கண்ணுசாமியின் ஆஸ்தான வழிகாட்டலுக்கு உரியவருமான “மனித நேயர்” டைனமிக் ஆன்மிக மாஸ்டர் கேப்ரியல் S.S. அவர்களால் கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி புதன்கிழமை KPR Banana Leaf Restaurant வாழையிலை உணவகம் அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது.

ஏற்கனவே கிள்ளான், பண்டார் புக்கிட் திங்கியில் மாமாக் உணவக பாணியில் Restaurant Maju Dinamik எனும் உணவகம் உட்பட கிள்ளானில் மூன்று உணவகங்களை கண்ணுசாமி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

இந்த மூன்று உணவகங்கள் ஒவ்வொன்றும், ஒரு கோட்பாடு அடிப்படையில் திறக்கப்பட்டுள்ளதாக கண்ணுசாமி கூறுகிறார். Coffe Hause, Cafe மற்றும் சிக்கன உணவு முறையான Economic Rice Concept ஆகிய மூன்று வெவ்வேறு பாணிகளில் மூன்று உணவகங்களும் செயல்படுவதாக கண்ணுசாமி குறிப்பிட்டார்.

எனினும் தங்கள் நிறுவனத்தின் இந்த நான்காவது உணவகமான KPR Banana Leaf Restaurant, சுயசேவை அடிப்படையில் திறக்கப்பட்டுள்ள வாழையிலை உணவகமாகும் என்று விவரித்தார் KPR Food Caterers நிறுவனம் உரிமையாளர் கண்ணுசாமி.

இதுநாள் வரை தங்களின் KPR Food Caterers நிறுவனத்திற்கு ஆதரவு வழங்கி வரும் வாடிக்கையாளர்கள், கோத்தாராஜாவில் செயல்படும் KPR Banana Leaf Restaurant உணவகத்திற்கும் தங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்று கண்ணுசாமி கேட்டுக்கொண்டார்.

Related News

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்