எச்.ஆர்.டி கார்ப் நிறுவனத்தின் புதிய தலைவராக ருஸ்லி ஜாஃபர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அவரது நியமனமானது கடந்த ஏப்ரல் 1 -ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நியமனம் திறன் மேம்பாடு, பணியாளர் பயிற்சி மற்றும் மனித வள நிலைத்தன்மையை முன்னெடுக்க நிறுவனத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாக எச்.ஆர்.டி கார்ப் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதேவேளையில், இந்த முடிவு தேசிய முன்னுரிமைகளுக்கும், தொடர்ந்து மாறிவரும் வேலைவாய்ப்பு வழங்குநர்கள் மற்றும் பணியாளர்களின் தேவைகளுக்கும் ஏற்ப எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுத்துறையில் 32 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவரான ருஸ்லி, இதற்கு முன்னர் 2022 முதல் 2025-ஆம் ஆண்டு வரை மலேசியக் கூட்டுறவுச் சங்கங்கள் ஆணையமான SKM-இன் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றியவர் என்றும் எச்.ஆர்.டி தெரிவித்துள்ளது.








