Mar 18, 2026
Thisaigal NewsYouTube
ரோஸ்மா மன்சோர் மேலும் 3 மாதங்கள் வரை கடப்பிதழை வைத்திருப்பதற்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி
தற்போதைய செய்திகள்

ரோஸ்மா மன்சோர் மேலும் 3 மாதங்கள் வரை கடப்பிதழை வைத்திருப்பதற்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.31-

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர், மேலும் 3 மாதம் காலம் வரையில் தனது அனைத்துலகக் கடப்பிதழைத் தன் வசம் வைத்திருப்பதற்கு புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.

சிங்கப்பூரில் உள்ள தனது மகளைச் சென்று பார்ப்பதற்கு ஏதுவாக அந்த முன்னாள் பிரதமரின் துணைவியாருக்கு அனுமதி அளிக்கப்படுவதாக மூவர் கொண்ட நீதிபதிகள் குழுவினருக்கு தலைமையேற்ற டத்தோ அஸ்மான் அப்துல்லா தெரிவித்தார்.

தமது வழக்கறிஞர் டத்தோ அக்பெர்டின் அப்துல் காடீர் சார்பில் ரோஸ்மா மன்சோர் செய்து கொண்ட விண்ணப்பத்திற்க துணை பப்ளிக் பிராசிகியூட்டர் பி. சாருலதா எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

இவ்வாண்டு முற்பகுதியில் நான்காவது குழந்தையைப் பிரசவித்து இருக்கும் தனது மகளைச் சிங்கப்பூருக்கு சென்று காண்பதற்கு ஏதுவாக ரோஸ்மா இவ்விண்ணப்பத்தைத் தாக்கல் செய்திருந்தார்.

சரவாக்கில் உள்ள பள்ளிகளுக்கு சூரிய சக்தி மின்விளக்குகள் பொருத்தும் 1.25 பில்லியன் மதிப்பிலான குத்தகையில் லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக 73 வயதுடைய ரோஸ்மாவிற்கு கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி கோலாலம்பூர் உயர்நீதின்றம் 10 ஆண்டு சிறைத் தண்டனை 970 மில்லியன் அபராதம் விதித்தது.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை