காப்புறுதிப் பணத்தைக் கோருவதற்காக தனது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதாக போலீசில் பொய் புகார் செய்த ஆடவர் பிடிபட்டார். 33 வயதுடைய அந்த நபர், கெந்திங் ஹைலண்ட்ஸ், கெந்திங் பெர்மாய் என்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் காணாமல் போனதாக போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போது, அது பொய் புகார் என்பது கண்டு பிடிக்கப்பட்டதாக பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஸைஹாம் முகமட் கஹார் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்த இடத்தில் ஓர் இடத்தில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமாராவை சோதனை செய்த போது, அன்றைய தினம் அப்படியொரு மோட்டார் சைக்கிள் அவ்விடத்தில் நிறுத்தப்படவில்லை என்பது நிரூபணமானது. மோட்டார் சைக்கிளுக்கு செலுத்த வேண்டிய தவணைப்பணம் நிலுவையில் இருந்ததால் அதனை தவிர்க்க காப்புறுதி பணத்திற்காக அந்த நபர் இப்படியொரு நாடாகமாடியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது என்று ஸைஹாம் முகமட் கஹார் குறிப்பிட்டார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


