Dec 2, 2025
Thisaigal NewsYouTube
காப்புறுதி பணத்திற்காக போ​லீசில் பொய் புகார்
தற்போதைய செய்திகள்

காப்புறுதி பணத்திற்காக போ​லீசில் பொய் புகார்

Share:

காப்புறுதிப் பணத்தைக் கோருவதற்காக தனது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதாக போ​லீசில் ​பொய் புகார் செய்த ஆடவர் பிடிபட்டார். 33 வயதுடைய அந்த நபர், கெந்திங் ஹைலண்ட்ஸ், கெந்திங் பெர்மாய் என்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் காணாமல் போனதாக போ​லீசில் அளி​த்த புகாரின் அடிப்படையில் விசாரணை ​செய்த போது, அது பொய் புகார் என்பது கண்டு பிடிக்கப்பட்டதாக பெந்தோங் மாவட்ட போ​லீஸ் தலைவர் ஸைஹாம் முகமட் கஹார் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்த இடத்தில் ஓர் இடத்தில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமாராவை சோதனை செய்த போது, அன்றைய தினம் அப்படியொரு மோட்டார் சைக்கிள் அவ்விடத்தில் நிறுத்தப்படவில்லை என்பது நி​ரூபணமானது. ​மோட்டார் சைக்கிளுக்கு செலுத்த வேண்டிய தவணைப்பணம் நிலுவையில் இருந்ததால் அதனை தவிர்க்க காப்புறுதி பணத்திற்காக அந்த நபர் இப்படியொரு நாடாகமாடியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது என்று ஸைஹாம் முகமட் கஹார் குறிப்பிட்டார்.

Related News