ஜோகூர் மாநில இடைத்தேர்தல்களில் சுவரொட்டிகளையும், பதாகைகளையும் சேதப்படுத்தியதாக நம்பப்படும் பேருந்து ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ கமருல் ஜமான் மாமத் தெரிவித்துள்ளார்.
ஜோகூர் மாநில குற்றப்புலனாய்வுத்துறை போலீசாரால் மேற்கொள்ளப்பட்ட டேம் கான்டாஸ் நடவடிக்கையில் 62 வயது பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாக கமருல் ஜமான் குறிப்பிட்டார்.
தம்போய், ஸ்கூடாய் கீரியில் இன்று அதிகாலை 5.35 மணியளவில் கைது செய்யப்பட்ட அந்த நபர், கூர்மையான ஆயுதத்தினால் சுவரொட்டிகள் மற்றும் பாதகைகளை சேதப்படுத்தியுள்ளதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று கமருல் ஜமான் மேலும் விவரித்தார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


