ஜோகூர் மாநில இடைத்தேர்தல்களில் சுவரொட்டிகளையும், பதாகைகளையும் சேதப்படுத்தியதாக நம்பப்படும் பேருந்து ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ கமருல் ஜமான் மாமத் தெரிவித்துள்ளார்.
ஜோகூர் மாநில குற்றப்புலனாய்வுத்துறை போலீசாரால் மேற்கொள்ளப்பட்ட டேம் கான்டாஸ் நடவடிக்கையில் 62 வயது பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாக கமருல் ஜமான் குறிப்பிட்டார்.
தம்போய், ஸ்கூடாய் கீரியில் இன்று அதிகாலை 5.35 மணியளவில் கைது செய்யப்பட்ட அந்த நபர், கூர்மையான ஆயுதத்தினால் சுவரொட்டிகள் மற்றும் பாதகைகளை சேதப்படுத்தியுள்ளதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று கமருல் ஜமான் மேலும் விவரித்தார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


