Mar 17, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு கடலடிச் சுரங்கப் பாதைத் திட்டம் ரத்து செய்யப்படவில்லை
தற்போதைய செய்திகள்

பினாங்கு கடலடிச் சுரங்கப் பாதைத் திட்டம் ரத்து செய்யப்படவில்லை

Share:

ஜார்ஜ்டவுன், நவம்பர்.14-

பினாங்கு மாநில அரசினால் கடந்த 2011 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட பினாங்கு கடலடி சுரங்கப் பாதைத் திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்று மாநில முதலமைச்சர் சோவ் கோன் யோவ் தெரிவித்தார்.

கடலடி சுரங்கப் பாதையின் திட்டமிடலில் எழுந்த தொழில்நுட்பச் சிக்கல்களுக்கான சிறந்த தீர்வுகளை ஆராய்வதற்காக இதற்குப் பொறுப்பேற்றுள்ள நிறுவனங்களிடமிருந்து இன்னமும் விளக்கம் பெறப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

சுரங்கப் பாதைத் திட்டம் செயல்படுத்தப்படாத திட்டமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் அது ரத்து செய்யப்பட்டதாக தாங்கள் எந்த சமயத்திலும் கூறவில்லை. அந்தத் திட்டம் இன்னமும் விவாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் ஆட்சிக்குழு கூட்டத்திலும் இந்தத் திட்டம் தொடர்பாக விளக்கம் கோரப்பட்டதாக சோவ் கோன் யோவ் தெரிவித்தார்.

இன்று பினாங்கு சட்டமன்றத்தில் பெர்சத்து கட்சியின் தெலுக் ஆயர் தாவார் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மி அலாங் கேள்விக்கு பதில் அளிக்கையில் சோவ் கோன் யோவ் இதனைத் தெரிவித்தார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு