குளுவாங், பிப்ரவரி.26-
குளுவாங்கில் சட்டவிரோதமாக பட்டாசுகளை வைத்திருந்ததாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
25 மற்றும் 41 வயதுடைய அந்த இரண்டு ஆடவர்களும், நேற்று புதன்கிழமை அதிகாலை அவர்களது வீடுகளில் தனித்தனியாக கைது செய்யப்பட்டதாக குளுவாங் மாவட்ட போலீஸ் உதவி ஆணையர் பாஹ்ரேன் முஹமட் நோ தெரிவித்துள்ளார்.
இந்த கைது நடவடிக்கையானது, தங்களுக்குக் கிடைத்த புகார்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இக்கைது நடவடிக்கையின் போது, 'ஹேப்பி பூம்' எனப்படும் 11 பட்டாசுகளையும், பயன்படுத்தப்பட்ட சில பட்டாசுகளையும், இரண்டு லைட்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.








