Mar 16, 2026
Thisaigal NewsYouTube
அரசு ஊழியர்களுக்குப் பிரதமரின் அதிரடி உத்தரவு: திட்டங்கள் மக்களைச் சென்றடைய வேண்டும்!
தற்போதைய செய்திகள்

அரசு ஊழியர்களுக்குப் பிரதமரின் அதிரடி உத்தரவு: திட்டங்கள் மக்களைச் சென்றடைய வேண்டும்!

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.07-

அரசாங்கத்தின் கொள்கைகளும் 167 புதிய மக்கள் நலத் திட்டங்களும் மக்களைச் சென்றடைவதை உறுதிச் செய்வது அரசு ஊழியர்களின் தலையாய கடமை என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். பல்வேறு விமர்சனங்களும் கருத்து வேறுபாடுகளும் இருந்த போதிலும், இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் அரசு ஊழியர்கள் உறுதிப் பூண்டு இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

ஆனால், அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களைச் சென்றடைவதில் சில நேரங்களில் தாமதம் ஏற்படுவதால், மக்களிடையே அதிருப்தியும் கோபமும் எழுகின்றன என்று அவர் சுட்டிக் காட்டினார். சமூக ஊடகங்கள் பெரும்பாலும் ஆக்கப்பூர்வமான கருத்துகளுக்குப் பதிலாக அவதூறுகளைப் பரப்பப் பயன்படுத்தப்படுவதால், அரசுத் திட்டங்களை உடனடியாகச் செயல்படுத்துவதன் மூலம் மக்களின் அதிருப்தியைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்