Mar 24, 2026
Thisaigal NewsYouTube
மக்களின் நல்வாழ்வு உறுதி செய்யப்படும்
தற்போதைய செய்திகள்

மக்களின் நல்வாழ்வு உறுதி செய்யப்படும்

Share:

ஜூலை 20-

இந்நாட்டில் உள்ள மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையம் தொடர்வதற்கு மத்திய அரசாங்கம் உறுதி பூண்டு இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

உள்கட்டமைப்பு நிலை, தரத்தை மேம்படுத்துதல் ஆகிய அணுகுமுறை வாயிலாக கல்வி, சுகாதாரம் மற்றும் ஆங்கில மொழியில் ஆளுமை ஆகியவற்றுக்கு அரசாங்கம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இன்று இஸ்தானா நெகாராவில் நாட்டின் 17 ஆவது மாமன்னராக அரியணை அமர்ந்த சுல்தான் இப்ராஹிமின் முடிசூட்டு விழாவையொட்டி வழங்கிய உறுதிமொழி உரையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இதனை வலியுறுத்தினார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான AI, இலக்கவியல் உருமாற்றம் மற்றும் மனித ஆற்றல் பரிமாற்றம் பேன்ற புதிய துறைகளில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை தொடரும் என்று பிரதமர் தமது உரையில் உறுதி தெரிவித்தார்.

Related News