Mar 15, 2026
Thisaigal NewsYouTube
பாதுகாவலர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்
தற்போதைய செய்திகள்

பாதுகாவலர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்

Share:

கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் பாதுகாவலர் ஒருவர் ஈப்போ அருகில் , கூனோங் லாங் என்ற இடத்தில் முகாமிடும் பகுதியில் இறந்து கிடந்தது இன்று புதன்கிழமை அதிகாலையில் கண்டு பிடிக்கப்பட்டது.

உள்ளூரைச் சேர்ந்த 41 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர் அதிகாலை 2.30 மணியளவில் இறந்து கிடப்பதைக் கண்ட பொது மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்ததாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி யாஹ்யா ஹசான் தெரிவித்தார்.

உடலில் பலத்த காயங்களுடன் அந்த நபர் வேலியோரமாக கிடந்தார். அந்த நபர், கூர்மையான பொருளினால் தாக்கப்பட்டு, கடும் காயங்களால் உயிரிழந்ததாக சவப்பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கொலைக்கு தொடர்புடையவர் என்று நம்பப்படும் சந்தேகப்பேர்வழி ஒருவர் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் கம்போங் மஞ்சோய் என்ற இடத்தில் கைது செய்யப்பட்டதாக ஏசிபி யாஹ்யா குறிப்பிட்டார்.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து