Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பாதுகாவலர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்
தற்போதைய செய்திகள்

பாதுகாவலர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்

Share:

கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் பாதுகாவலர் ஒருவர் ஈப்போ அருகில் , கூனோங் லாங் என்ற இடத்தில் முகாமிடும் பகுதியில் இறந்து கிடந்தது இன்று புதன்கிழமை அதிகாலையில் கண்டு பிடிக்கப்பட்டது.

உள்ளூரைச் சேர்ந்த 41 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர் அதிகாலை 2.30 மணியளவில் இறந்து கிடப்பதைக் கண்ட பொது மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்ததாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி யாஹ்யா ஹசான் தெரிவித்தார்.

உடலில் பலத்த காயங்களுடன் அந்த நபர் வேலியோரமாக கிடந்தார். அந்த நபர், கூர்மையான பொருளினால் தாக்கப்பட்டு, கடும் காயங்களால் உயிரிழந்ததாக சவப்பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கொலைக்கு தொடர்புடையவர் என்று நம்பப்படும் சந்தேகப்பேர்வழி ஒருவர் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் கம்போங் மஞ்சோய் என்ற இடத்தில் கைது செய்யப்பட்டதாக ஏசிபி யாஹ்யா குறிப்பிட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்