Dec 2, 2025
Thisaigal NewsYouTube
தாய்லாந்து – கம்போடியா அமைதி ஒப்பந்தத்தை நிலைநிறுத்துவதில் மலேசியா உறுதி!
தற்போதைய செய்திகள்

தாய்லாந்து – கம்போடியா அமைதி ஒப்பந்தத்தை நிலைநிறுத்துவதில் மலேசியா உறுதி!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.12-

கம்போடிய எல்லையில் நில வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ள போதிலும், தாய்லாந்து – கம்போடியா இடையிலான அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதில் மலேசியா உறுதியாக இருப்பதாக ஆயதப்படைத் தளபதி ஜெனரல் டான் ஶ்ரீ முகமட் நிஸாம் ஜாஃபார் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதி மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்ட மலேசியா, அதில் தொடர்ந்து முன்னேற்றத்தைக் காண விரும்புகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசியானில் உறுப்பினராக இருக்கும் மலேசியா, அண்டை நாடுகளுக்கு உதவி செய்து, அங்கு அமைதி நிலவுவதை உறுதிச் செய்யும் பொறுப்பில் இருக்கிறது என்றும் நிஸாம் ஜாஃபார் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை, தாய்லாந்து – கம்போடியா எல்லைப் பகுதியில் நிகழ்ந்த நில வெடிச் சம்பவத்தில் தாய்லாந்தைச் சேர்ந்த இரண்டு இராணுவ வீரர்கள் காயம் அடைந்ததையடுத்து, அமைதி ஒப்பந்தத்தை நிறுத்துவதாக தாய்லாந்து அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்