Feb 25, 2026
Thisaigal NewsYouTube
ரவாங் புக்கிட் செந்தோசாவில் ஏற்பட்ட கலவரம் தொடர்பில் 6 பேர் கைது
தற்போதைய செய்திகள்

ரவாங் புக்கிட் செந்தோசாவில் ஏற்பட்ட கலவரம் தொடர்பில் 6 பேர் கைது

Share:

ஷா ஆலாம், பிப்ரவரி.25-

ரவாங், புக்கிட் செந்தோசாவில் நேற்று நடந்த கலவரம் ஒன்றில், தொடர்புடையதாக நம்பப்படும் 6 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட இரு புகார்களையடுத்து, 18 வயது முதல் 49 வயதுடைய அந்த 6 பேரும் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் தெரிவித்துள்ளார்.

இரு குடும்பத்தினரிடையே எழுந்த தகராறு முற்றிய நிலையில், அது கலவரமாக வெடித்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், குற்றவியல் சட்டம், பிரிவு 148-இன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இக்கலவரமானது முற்றிலும் இரு குடும்பத்தினரிடையே எழுந்த தனிப்பட்ட மோதல் காரணமானது என்றும், இன விவகாரமோ அல்லது குண்டர் கும்பல் பிரச்சினையோ அல்ல என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் நேற்று மாலை 4.30 மணியளவில், இச்சம்பவம் தொடர்பான காணொளி பரவியதையடுத்து, உடனடியாக இக்கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் ஷாஸெலி தெரிவித்துள்ளார்.

Related News

புனித குர்ஆன் மீது கால் வைத்து அவமதிப்பு - பல்கலைக்கழக மாணவர் கைது

புனித குர்ஆன் மீது கால் வைத்து அவமதிப்பு - பல்கலைக்கழக மாணவர் கைது

சட்ட விதிமுறைகளுக்கு இணங்க வழிபாட்டுத் தலங்கள் கட்டப்பட வேண்டும்: பொதுமக்கள் பொறுப்புடன் செயல்பட  பகாங் சுல்தான் வலியுறுத்து

சட்ட விதிமுறைகளுக்கு இணங்க வழிபாட்டுத் தலங்கள் கட்டப்பட வேண்டும்: பொதுமக்கள் பொறுப்புடன் செயல்பட பகாங் சுல்தான் வலியுறுத்து

ஏகேபிஎஸ் தளபதி மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு - அதிர்ஷ்டவசமாகக் காயமின்றி உயிர் தப்பினார்

ஏகேபிஎஸ் தளபதி மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு - அதிர்ஷ்டவசமாகக் காயமின்றி உயிர் தப்பினார்

குடும்ப வன்முறை குற்றச்சாட்டில் சிக்கிய பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் முதலமைச்சரிடம் மன்னிப்பு

குடும்ப வன்முறை குற்றச்சாட்டில் சிக்கிய பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் முதலமைச்சரிடம் மன்னிப்பு

சபா விடுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அரிய வகை விலங்குகளின் இறைச்சி உணவுகள் - 3 பேர் கைது

சபா விடுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அரிய வகை விலங்குகளின் இறைச்சி உணவுகள் - 3 பேர் கைது

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் கோர விபத்து: 71 வயது மூதாட்டி பலி, இருவர் காயம்

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் கோர விபத்து: 71 வயது மூதாட்டி பலி, இருவர் காயம்

ரவாங் புக்கிட் செந்தோசாவில் ஏற்பட்ட கலவரம் தொடர்பில் 6 பே... | Thisaigal News