இந்தோனேசியா, நூசா தெங்காரா தீமோர் பிரதேசத்தில் ஃபுலோரஸ் தீவில் மங்கரை பாராட் நகரில் இன்று தொடங்கி நாளை வரை நடைபெரும் 42 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்துகொண்டார்.
பிராந்திய குழுக்களுடன் பரஸ்பர அம்சம் உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து விவாதிக்க பிரதமர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டார். 10 ஆசியான் உறுப்பு நாடுகளில் இருந்து எட்டு அரசாங்கத் தலைவர்கள் இந்த 42 ஆவது உச்ச நிலை மாநாட்டில் பங்கேற்ற வேளையில், அழைப்பு விடுக்கப்படாத காரணத்தால் மியன்மாரும், வரும் மே 14 ஆம் தேதி தேர்தலை எதிர் நோக்கவிருக்கும் தாய்லாந்தும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை.
பிராந்திய பொருளாதார பின்னடைவை வலுப் படுத்துவதிலும், தற்போதைய சவால்களை எதிர் கொள்வதிலும், வலுவான பிராந்தியத்தை உருவாக்குவதற்கான பல முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அந்தத் தலைவர்கள் தங்களின் 2 நாள் கூட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்


