இந்தோனேசியா, நூசா தெங்காரா தீமோர் பிரதேசத்தில் ஃபுலோரஸ் தீவில் மங்கரை பாராட் நகரில் இன்று தொடங்கி நாளை வரை நடைபெரும் 42 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்துகொண்டார்.
பிராந்திய குழுக்களுடன் பரஸ்பர அம்சம் உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து விவாதிக்க பிரதமர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டார். 10 ஆசியான் உறுப்பு நாடுகளில் இருந்து எட்டு அரசாங்கத் தலைவர்கள் இந்த 42 ஆவது உச்ச நிலை மாநாட்டில் பங்கேற்ற வேளையில், அழைப்பு விடுக்கப்படாத காரணத்தால் மியன்மாரும், வரும் மே 14 ஆம் தேதி தேர்தலை எதிர் நோக்கவிருக்கும் தாய்லாந்தும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை.
பிராந்திய பொருளாதார பின்னடைவை வலுப் படுத்துவதிலும், தற்போதைய சவால்களை எதிர் கொள்வதிலும், வலுவான பிராந்தியத்தை உருவாக்குவதற்கான பல முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அந்தத் தலைவர்கள் தங்களின் 2 நாள் கூட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


