Feb 27, 2026
Thisaigal NewsYouTube
ஜாசினில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - இருவர் பலி
தற்போதைய செய்திகள்

ஜாசினில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - இருவர் பலி

Share:

ஜாசின், பிப்ரவரி.27-

மலாக்கா, ஜாசின் அருகே உள்ள ஜாலான் செர்காம்-பெம்பான் சாலையில் நேற்று மாலை இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இருவர் உயிரிழந்தனர்.

மாலை சுமார் 6.50 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் 33 வயதுடைய ஓர் ஆண் மற்றும் 74 வயதுடைய மூதாட்டி ஆகியோர் உயிரிழந்ததாக ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் லீ ராபர்ட் தெரிவித்தார்.

விபத்தின் போது, 33 வயது நபர் ஓட்டி வந்த செடான் ரகக் கார் பெம்பானில் இருந்து செர்க்காம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர்புற வழித்தடத்திற்குள் நுழைந்தது.

அப்போது செர்க்காம் நோக்கி வந்து கொண்டிருந்த மற்றொரு செடான் கார் மீது அது பலமாக மோதியது. இரண்டாவது காரை 44 வயது நபர் ஓட்டி வந்த நிலையில், அதில் அவரது தாயார் மற்றும் 40 வயதுடைய சகோதரரும் பயணித்தனர்.

விபத்தின் தீவிரத்தால் முதல் காரை ஓட்டி வந்த 33 வயது நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரண்டாவது காரில் இருந்த 74 வயது மூதாட்டியும் உயிரிழந்தார்.

மேலும், இரண்டாவது காரை ஓட்டி வந்தவருக்கு கை மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டன, அவரது சகோதரருக்கு நெஞ்சுப் பகுதியில் காயம் ஏற்பட்டது என்று அந்த போலீஸ் அதிகாரி விளக்கினார்.

Related News

குடும்ப வன்முறை: பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஃபாமி ஸைனோல்  குற்றஞ்சாட்டப்பட்டார்

குடும்ப வன்முறை: பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஃபாமி ஸைனோல் குற்றஞ்சாட்டப்பட்டார்

யுடிஎம் மாணவர் மரணம்: குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர் மூன்று ராணுவப் பயிற்சி அதிகாரிகள்

யுடிஎம் மாணவர் மரணம்: குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர் மூன்று ராணுவப் பயிற்சி அதிகாரிகள்

லஞ்சம் வாங்கியதாக பரவிய வீடியோ: செராஸ் மாவட்ட  போலீஸ் மறுப்பு

லஞ்சம் வாங்கியதாக பரவிய வீடியோ: செராஸ் மாவட்ட போலீஸ் மறுப்பு

பட்டாசு வீசி தெரு நாயைக் கொன்ற உணவக உரிமையாளருக்கு 2 ஆயிரம் ரிங்கிட்  அபராதம்

பட்டாசு வீசி தெரு நாயைக் கொன்ற உணவக உரிமையாளருக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மாமன்னருக்கு தசை மற்றும் எலும்பு வலி: அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் ஒத்தி வைப்பு

மாமன்னருக்கு தசை மற்றும் எலும்பு வலி: அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் ஒத்தி வைப்பு

பெண் கொடூரக் கொலை - முன்னாள் வருங்கால கணவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது

பெண் கொடூரக் கொலை - முன்னாள் வருங்கால கணவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது