May 26, 2026
Thisaigal NewsYouTube
நடுவர் தாக்கப்பட்ட சம்பவம்: போலீசார் விசாரணை
தற்போதைய செய்திகள்

நடுவர் தாக்கப்பட்ட சம்பவம்: போலீசார் விசாரணை

Share:

செர்டாங், டிச. 17-


கடந்த ஞாயிற்றுக்கிழமை, பூச்சோங் ஜெயாவில் நடைபெற்ற கால்பந்து விளையாட்டுப் போட்டியின் போது சில ஆட்டக்காரர்கள், நடுவரை சூழ்ந்துக்கொண்டு, சரமாரியாக தாக்கிய சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்று செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.ஏ. அன்பழகன் தெரிவித்தார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதைத் தொடர்ந்த இது குறித்து போலீசார் விசாரணை செய்யத் தொடங்கியிருப்பதாக அன்பழகன் குறிப்பிட்டார்.

தவிர, இந்த கால்பந்தாட்டத்தில் தாக்கப்பட்டதாக கூறப்படும் 38 வயது நடுவர் என்று நம்பப்படும் ஆடவர் ஒருவர் போலீசில் புகார் அளித்து இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

ஓர் அணிக்கு பெனால்டி வாய்ப்பை நடுவர் வழங்கியதில் அதிருப்தி அடைந்ததாக நம்பப்படும் மற்றொரு அணியைச் சேர்ந்த ஆட்டக்காரர்கள் சிலர், அந்த நடுவரை தாக்கியதாக நம்பப்படுகிறது.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு