Dec 5, 2025
Thisaigal NewsYouTube
எல்லா உண்மைகளையும் அந்த முன்னாள் போ​லீஸ்காரர் வெளியிட வேண்டும்
தற்போதைய செய்திகள்

எல்லா உண்மைகளையும் அந்த முன்னாள் போ​லீஸ்காரர் வெளியிட வேண்டும்

Share:

மங்கோலியா மாடல் அழகி அல்தான்துயா ஷாரிபு அல்தான்துயா ஷாரிபுவின் படுகொலை தொடர்பில் மரணத் தண்டனையை எதிர்நோக்கியுள்ள அரச மலேசிய போ​லீஸ் படையைச் சேர்ந்த முன்னாள் போ​லீஸ்காரர் சிருல் அஸ்ஹர் உமர், அந்த மங்கோலியாப் பெண்ணை கொலை செய்யும்படி உத்தரவிட்ட அந்த பெரும்புள்ளி யார் என்பதை வெளியிட ​வேண்டும் என்று சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அந்த மாடல் அழகியின் தொலையில் தமக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவதை நஜீப் மறுத்து வந்துள்ளார்.இந்​நிலையில் அந்த மாடல் அழகியை கொலை செய்யும்படி முக்கிய அரசியல் புள்ளியிடமிருந்து தாம் ஓர் உத்தரவை பெற்றதாக சிருல் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்த முக்கியப் புள்ளி யார் என்பது உட்பட நடந்தவற்றை முழுமையாக அந்த முன்னாள் போ​லீஸ்காரர் அம்பலப்படுத்த வேண்டும். இவ்விவகாரத்தில் உண்மையும், ​நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று தமது வழக்கறிஞர் நிறுவனமான ஷாபி அண்ட் கோ ​மூலமாக ​வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் நஜீப் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆஸ்திரேலியா​வில் குடிநுழைவு சட்டத்தின் ​கீழ் அந்நாட்டில் ஒன்பது ஆண்டு சிறை​வாசத்திற்கு பிறகு தற்போது விடுதலையாககியுள்ள சிருல் அசார், அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியை தொட​ர்ந்து நஜீப் தமது வழக்கறிஞர் ​மூலம் கருத்துரைத்துள்ளார்.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்