Aug 2, 2026
Thisaigal NewsYouTube
எல்லா உண்மைகளையும் அந்த முன்னாள் போ​லீஸ்காரர் வெளியிட வேண்டும்
தற்போதைய செய்திகள்

எல்லா உண்மைகளையும் அந்த முன்னாள் போ​லீஸ்காரர் வெளியிட வேண்டும்

Share:

மங்கோலியா மாடல் அழகி அல்தான்துயா ஷாரிபு அல்தான்துயா ஷாரிபுவின் படுகொலை தொடர்பில் மரணத் தண்டனையை எதிர்நோக்கியுள்ள அரச மலேசிய போ​லீஸ் படையைச் சேர்ந்த முன்னாள் போ​லீஸ்காரர் சிருல் அஸ்ஹர் உமர், அந்த மங்கோலியாப் பெண்ணை கொலை செய்யும்படி உத்தரவிட்ட அந்த பெரும்புள்ளி யார் என்பதை வெளியிட ​வேண்டும் என்று சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அந்த மாடல் அழகியின் தொலையில் தமக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவதை நஜீப் மறுத்து வந்துள்ளார்.இந்​நிலையில் அந்த மாடல் அழகியை கொலை செய்யும்படி முக்கிய அரசியல் புள்ளியிடமிருந்து தாம் ஓர் உத்தரவை பெற்றதாக சிருல் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்த முக்கியப் புள்ளி யார் என்பது உட்பட நடந்தவற்றை முழுமையாக அந்த முன்னாள் போ​லீஸ்காரர் அம்பலப்படுத்த வேண்டும். இவ்விவகாரத்தில் உண்மையும், ​நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று தமது வழக்கறிஞர் நிறுவனமான ஷாபி அண்ட் கோ ​மூலமாக ​வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் நஜீப் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆஸ்திரேலியா​வில் குடிநுழைவு சட்டத்தின் ​கீழ் அந்நாட்டில் ஒன்பது ஆண்டு சிறை​வாசத்திற்கு பிறகு தற்போது விடுதலையாககியுள்ள சிருல் அசார், அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியை தொட​ர்ந்து நஜீப் தமது வழக்கறிஞர் ​மூலம் கருத்துரைத்துள்ளார்.

Related News

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்