Mar 19, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூரில் மாணவர்களின் தவறான நடத்தை தொடர்பாக 1,219 புகார்கள் பதிவு!
தற்போதைய செய்திகள்

சிலாங்கூரில் மாணவர்களின் தவறான நடத்தை தொடர்பாக 1,219 புகார்கள் பதிவு!

Share:

ஷா ஆலாம், அக்டோபர்.27-

சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறைக்கு, இவ்வாண்டில், மொத்தம் 1,219 மாணவர் ஒழுக்கக்கேடு புகார்கள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில், 265 வழக்குகள், பகடி வதை தொடர்பானவை என்று அம்மாநில காவல்துறை துணைத் தலைவர் முகமட் ஸைனி அபு ஹசான் தெரிவித்துள்ளார்.

மொத்த வழக்குகளில், 41 சம்பவங்களுக்கு விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அவற்றில் 32 வழக்குகள் வன்முறை குற்றச்செயல்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், சிலாங்கூரில் சுமார் 9,97,000 (9 லட்சத்து 97 ஆயிரம்) மாணவர்களை 6,000 ஆசிரியர்கள் மட்டுமே கவனித்து வரும் நிலையில், ஒழுக்கக்கேடு புகார்களின் விகிதம் மிகக் குறைவு என்றும் ஸைனி குறிப்பிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில், மாநிலத்தின் பள்ளிகள் பெரும்பாலும் பாதுகாப்பாக உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை