Jul 1, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூரில் மாணவர்களின் தவறான நடத்தை தொடர்பாக 1,219 புகார்கள் பதிவு!
தற்போதைய செய்திகள்

சிலாங்கூரில் மாணவர்களின் தவறான நடத்தை தொடர்பாக 1,219 புகார்கள் பதிவு!

Share:

ஷா ஆலாம், அக்டோபர்.27-

சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறைக்கு, இவ்வாண்டில், மொத்தம் 1,219 மாணவர் ஒழுக்கக்கேடு புகார்கள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில், 265 வழக்குகள், பகடி வதை தொடர்பானவை என்று அம்மாநில காவல்துறை துணைத் தலைவர் முகமட் ஸைனி அபு ஹசான் தெரிவித்துள்ளார்.

மொத்த வழக்குகளில், 41 சம்பவங்களுக்கு விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அவற்றில் 32 வழக்குகள் வன்முறை குற்றச்செயல்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், சிலாங்கூரில் சுமார் 9,97,000 (9 லட்சத்து 97 ஆயிரம்) மாணவர்களை 6,000 ஆசிரியர்கள் மட்டுமே கவனித்து வரும் நிலையில், ஒழுக்கக்கேடு புகார்களின் விகிதம் மிகக் குறைவு என்றும் ஸைனி குறிப்பிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில், மாநிலத்தின் பள்ளிகள் பெரும்பாலும் பாதுகாப்பாக உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

பினாங்கு நிதி ஒதுக்கீடு: பிரதமர் அன்வாருக்கு லிம் குவான் எங் அவசரக் கோரிக்கை!

பினாங்கு நிதி ஒதுக்கீடு: பிரதமர் அன்வாருக்கு லிம் குவான் எங் அவசரக் கோரிக்கை!

தெருநாய்களுக்கு வீசப்படும் உணவு: பட்டர்வொர்த்தில் பொதுமக்களுக்குச் சுகாதாரச் சீர்கேடு!

தெருநாய்களுக்கு வீசப்படும் உணவு: பட்டர்வொர்த்தில் பொதுமக்களுக்குச் சுகாதாரச் சீர்கேடு!

பாஸ் மீது அதிருப்தி; பாக்காத்தான் ஹரப்பான் பக்கம் சாய்கிறதா பெர்சத்து ஆதரவு?

பாஸ் மீது அதிருப்தி; பாக்காத்தான் ஹரப்பான் பக்கம் சாய்கிறதா பெர்சத்து ஆதரவு?

எரிபொருள் மானியம் RM40 பில்லியனாக உயர்வு: கடத்தல்காரர்களைக் களமிறங்கிப் பிடிக்கும் மலேசிய அரசாங்கம்!

எரிபொருள் மானியம் RM40 பில்லியனாக உயர்வு: கடத்தல்காரர்களைக் களமிறங்கிப் பிடிக்கும் மலேசிய அரசாங்கம்!

தேசிய கல்வி அமைப்பில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களுக்கு அலட்சியம் தடையாக இருக்கக் கூடாது / அன்வார் எச்சரிக்கை

தேசிய கல்வி அமைப்பில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களுக்கு அலட்சியம் தடையாக இருக்கக் கூடாது / அன்வார் எச்சரிக்கை

தடுப்பு மையங்களுக்கு சுஹாகாம் உடனடி அணுகல் வழங்க ஆலோசனை

தடுப்பு மையங்களுக்கு சுஹாகாம் உடனடி அணுகல் வழங்க ஆலோசனை