Jan 19, 2026
Thisaigal NewsYouTube
அனுமதிக்கப்பட்ட லிட்டரை விட, அதிகமான லிட்டர் எண்ணெயைக் கிடங்கில் வைத்திருந்த நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

அனுமதிக்கப்பட்ட லிட்டரை விட, அதிகமான லிட்டர் எண்ணெயைக் கிடங்கில் வைத்திருந்த நடவடிக்கை

Share:

அரசாங்கத்தால் சப்சீடி வழங்கப்பட்ட டீசல் எண்ணெயை, அனுமதிக்கப்பட்ட லிட்டரை விட, அதிகமான லிட்டர் எண்ணெயைக் கிடங்கில் வைத்திருந்த நடவடிக்கையை உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்வாதார செலவின நடவடிக்கை குழு கண்டறிந்துள்ளது.

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் லூகுட் தொழில்துறை பகுதியில், 60,000 லிட்டர் டீசல் எண்ணெய் மட்டுமே வைத்திருக்க அனுமதிக்கப்பட்டிருந்த போது, அந்த நிறுவனம் 98,840 லீட்டர் எண்ணெயை வைத்திருந்துள்ளது என உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்வாதார செலவினம் அமைச்சின் இயக்குனர் முகமட் ஸாஹீர் மஸ்லான் தெரிவித்தார்.

அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள அளவை மீறி அதிகமான அளவில் என்ணெயைப் பதிக்கி வைத்திருப்பது குற்றச் செயலாகும் என்றும் இதனால் நாட்டில் டீசல் எண்ணெய் விநியோகம் தடைப்படக்கூடும் என அவர் மேலும் கூறினார். இந்தச் சம்பவம் குறித்து தமது அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!