Jul 5, 2026
Thisaigal NewsYouTube
ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்திய ஜேபிஜே அதிகாரி பணியிடை நீக்கம்
தற்போதைய செய்திகள்

ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்திய ஜேபிஜே அதிகாரி பணியிடை நீக்கம்

Share:

ஈப்போ, ஜூலை.10-

பேராக், சிம்பாங் பூலாயில் சாலைப் போக்குவரத்துத் துறையான ஜேபிஜே வாகனத்தை ஆபத்தான முறையில் செலுத்திய அமலாக்க அதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அந்த அமலாக்க அதிகாரி, சாலை வளைவில் முந்திச் செல்வதற்குத் தடை விதிக்கும், சாலை இரட்டைக் கோட்டையும் பொருட்டுபடுத்தாமல், கனரக லோரியை முந்திச் செல்லும் முயற்சியில் எதிரே வந்த வாகனத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அபாயகரமாக வாகனத்தைச் செலுத்திய காணொளி, தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலானது.

வாகனமோட்டிகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஜேபிஜே அமலாக்க அதிகாரிகள், சாலை ரவுடிகளைப் போல் அபாயகரமான வாகனத்தைச் செலுத்தியதற்கு பொதுமக்களிடமிருந்து பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதற்குத் தார்மீக பொறுப்பேற்று ஜேபிஜே தலைமை இயக்குநர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அந்த அமலாக்க அதிகாரி, ஏற்கனவே இது போன்ற குற்றங்களைப் புரிந்துள்ள நிலையில் விசாரணைக்கு ஏதுவாக அவர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று ஜேபிஜே தெரிவித்துள்ளது.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது