வரும் சிலாங்கூர் மாநில சட்ட மன்ற தேர்தலில், ரவாங் தொகுதியின் நடப்பு சட்ட மன்ற உறுப்பினர் சுவான் வேய் கியாட்டிற்குப் பதிலாக, அந்தச் சட்டமன்ற தொகுதியில் தாம் போட்டியிடப் போவதாக கூறப்படுவதைக் கட்சியின் துணைத் தலைமை செயலாளர் டாக்டர் சத்தியப் பிரகாஷ் நடராஜன் மறுத்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருக்கும் பி.கே.ஆர். வேட்பாளர்கள் தொடர்பில், கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தான் முடிவுச் செய்வார் என்று டாக்டர் சத்தியப் பிரகாஷ் குறிப்பிட்டார்.
ரவாங் தொகுதியில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர் குறித்து, இதுவரையில் எந்தவொரு அதிகாரப்பூர்வமான முடிவும் எடுக்கப்படவில்லை என்று கடந்த பொதுத் தேர்தலில் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்விக் கண்டவருமான டாக்டர் சத்தியப் பிரகாஷ் விளக்கினார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


