வரும் சிலாங்கூர் மாநில சட்ட மன்ற தேர்தலில், ரவாங் தொகுதியின் நடப்பு சட்ட மன்ற உறுப்பினர் சுவான் வேய் கியாட்டிற்குப் பதிலாக, அந்தச் சட்டமன்ற தொகுதியில் தாம் போட்டியிடப் போவதாக கூறப்படுவதைக் கட்சியின் துணைத் தலைமை செயலாளர் டாக்டர் சத்தியப் பிரகாஷ் நடராஜன் மறுத்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருக்கும் பி.கே.ஆர். வேட்பாளர்கள் தொடர்பில், கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தான் முடிவுச் செய்வார் என்று டாக்டர் சத்தியப் பிரகாஷ் குறிப்பிட்டார்.
ரவாங் தொகுதியில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர் குறித்து, இதுவரையில் எந்தவொரு அதிகாரப்பூர்வமான முடிவும் எடுக்கப்படவில்லை என்று கடந்த பொதுத் தேர்தலில் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்விக் கண்டவருமான டாக்டர் சத்தியப் பிரகாஷ் விளக்கினார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


