வரும் சிலாங்கூர் மாநில சட்ட மன்ற தேர்தலில், ரவாங் தொகுதியின் நடப்பு சட்ட மன்ற உறுப்பினர் சுவான் வேய் கியாட்டிற்குப் பதிலாக, அந்தச் சட்டமன்ற தொகுதியில் தாம் போட்டியிடப் போவதாக கூறப்படுவதைக் கட்சியின் துணைத் தலைமை செயலாளர் டாக்டர் சத்தியப் பிரகாஷ் நடராஜன் மறுத்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருக்கும் பி.கே.ஆர். வேட்பாளர்கள் தொடர்பில், கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தான் முடிவுச் செய்வார் என்று டாக்டர் சத்தியப் பிரகாஷ் குறிப்பிட்டார்.
ரவாங் தொகுதியில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர் குறித்து, இதுவரையில் எந்தவொரு அதிகாரப்பூர்வமான முடிவும் எடுக்கப்படவில்லை என்று கடந்த பொதுத் தேர்தலில் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்விக் கண்டவருமான டாக்டர் சத்தியப் பிரகாஷ் விளக்கினார்.

Related News

போதைப் பொருள் கடத்தல் கும்பல் முறியடிப்பு

சமய விவகாரங்களை அதிகாரிகள் கவனமாகக் கையாள வேண்டும் - பாஸ் வலியுறுத்து

வங்கதேச வெளியுறவு அமைச்சருடன் மலேசிய தூதர் சந்திப்பு/ மலேசிய வாகன உற்பத்தி பாகங்கள் வங்கதேசத்தில் ஒன்றிணைக்கும் வாய்ப்புகள் ஆய்வு

சிலாங்கூரில் 105 கிலோ போதைப் பொருள் பறிமுதல் - இருவர் கைது

ஈப்போவில் நோன்பைத் தவிர்த்துவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 முஸ்லிம்கள் கைது


