பேரா மாநில விவசாயிகள் விவகாரத்தில் மத்திய அரசாங்கம் தலையிட வேண்டும் என்று மலேசிய சோஷலிச கட்சியான பிஎஸ்எம் மின் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் தேவராஜ் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 1950 ஆம் ஆண்டு முதல் விவசாயம் செய்து வரும் பேரா மாநில விவசாயிகளின் 1,200 ஹெக்டர் விளை நிலங்கள் மேபாட்டாளருக்கு வழங்கப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாததாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதனால் தானா ஹீத்தாம், சங்காட் கின்டிங், தானா கந்தான், குவாலா குவாங் ஆகிய பகுதிகளை சேர்ந்த 300 க்கும் மேற்ட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களின் விளை நிலங்களிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் தெரிவித்தார்.
வீடமைப்புத்திட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகளை நிறுவுவதற்காக கிட்டத்தட்ட 95 விழுக்காடு நிலங்கள் மேம்பாட்டாளருக்கு ஒதுக்கி தரப்பட்டுள்ளது என்று விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சிடம் வழங்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் இதனை தெரிவித்துள்ளார்.








