நாடறிந்த மூத்த அரசியல்வாதியும், தன்னலமற்ற சமூக சேவையாளருமான டத்தோ டாக்டர் ந. ஞானபாஸ்கரன் அவர்களின் வாழ்வியலைப் பேசும் "வரலாறு கண்ட சகாப்தம்" நூல் வெளியீட்டு விழா சுங்கைப்பட்டாணியில் மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது!
கல்விப் பணிக்காகக் கரம் கோர்ப்போம் வாரீர்! இந்த நூல் வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் அனைத்து நிதியும் தமிழ்ப்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நிதிக்காக வழங்கப்படவுள்ளது.
* நாள்: 11 ஏப்ரல் சனிக்கிழமை,
* நேரம்: மாலை 4.00 மணி
* இடம்: ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய மண்டபம், சுங்கைப்பட்டாணி.
* தலைமை: திரு. எஸ்.கே. சுரேஷ், கெடா மாநில மஇகா தலைவர்
* முதல் நூல் பெறுநர்: டாக்டர் D. சின்னையா நாயுடு, டாக்டர் எஸ். ஜோபினா நாயுடு
இலக்கிய ஆர்வலர்களும், பொதுமக்களும் திரளாக வருகை தந்து, இந்த உன்னத நோக்கத்திற்கு ஆதரவு நல்குமாறு டத்தோ டாக்டர் ஞானபாஸ்கரன் குடும்பத்தினர் அன்புடன் அழைக்கின்றனர்.
🌟 இலக்கியம் காப்போம்! கல்விக்குக் கை கொடுப்போம்!









