Aug 10, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில் மூன்று மாவட்டங்களில் வெள்ளம்
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் மூன்று மாவட்டங்களில் வெள்ளம்

Share:

ஜோகூர் பாரு, மார்ச்.20-

ஜோகூரில் நேற்று முதல் தொடர் கனமழை பெய்ததால், மூன்று மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இன்று காலை 8 மணி நிலவரப்படி, பத்து தற்காலிக துயர்துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மாநிலப் பேரிடர் மேலாண்மை செயற்குழுவின் தலைவர் அஸ்மி ரோஹானி கூறுகையில், பாதிக்கப்பட்ட 257 குடும்பங்களைச் சேர்ந்த 893 பேர் தங்கள் வீடுகளில் இருந்து அந்த 10 மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளதாகத் தெரிவித்தார்.

ஜோகூர் பாருவில் பாதிக்கப்பட்டவர்கள் 567 பேர், அதைத் தொடர்ந்து கூலாயில் 269 பேரும் பொந்தியானில் 57 பேரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுங்கை சியாம், சுங்கை ஸ்கூடாய் , பாரிட் கம்போங் பாசீர் கால்வாய் ஆகியவற்றில் தண்ணீர் ஆபத்தான அளவைத் தாண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோகூரில் உள்ள பத்து மாவட்டங்களிலும் இன்று காலை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஜோகூரில் பெய்து வரும் திடர் கனமழையைச் சந்தித்திருக்கும் அம்மாநில மக்கள், எப்போதும் விழிப்புடனும் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என ஜோகூர் மாநில முதல்வர் டத்தோ ஓன் ஹாபீஃஸ் காஃஸி கேட்டுக் கொண்டுள்ளார், குறிப்பாக, MET JOHORஇன் தகவலின்படி, குளுவாங், மெர்சிங், பொந்தியான், கூலாய், கோத்தா திங்கி, ஜோகூர் பாரு ஆகிய மாவட்டங்களில் கடுமையான மழை பெய்யக் கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து