May 6, 2026
Thisaigal NewsYouTube
சிசிடிவி கேமரா பதிவை போலீசார் வெளியிட வேண்டும்
தற்போதைய செய்திகள்

சிசிடிவி கேமரா பதிவை போலீசார் வெளியிட வேண்டும்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.24-

தனது வீட்டில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், கடந்த நவம்பர் 28-ஆம் தேதி நடத்திய சோதனையின் போது எடுக்கப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளைப் போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வெளியிட வேண்டும் என்று வர்த்தகர் டத்தோ ஆல்பெர்ட் தே மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

சோதனையின் போது முகமூடி அணிந்த எஸ்பிஆர்எம் அதிகாரிகள் துப்பாக்கிகளைக் காட்டித் தன்னையும் தனது மனைவியையும் மிரட்டியதாக ஆல்பெர்ட் தே புகார் அளித்துள்ளார்.

சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார், ஆரம்பக் கட்ட விசாரணையில் துப்பாக்கி காட்டப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்று கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி தெரிவித்திருந்தார்.

போலீசாரின் இந்த கூற்றை மறுத்துள்ள ஆல்பெர்ட் தே, சோதனையின் போது எஸ்பிஆர்எம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுதான் இந்த வழக்கின் மிக முக்கியமான ஆதாரம் என்றும், அதை வெளியிட்டால் உண்மை தெரிய வரும் என்றும் கூறியுள்ளார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்