கிளந்தானில் 13 வயதுடைய சிறுமியை தொழிலாளர் ஒருவர் பாலியல் பலாத்காரம் புரிந்து திரெங்கானுவில் உள்ள காவல் நிலைத்திற்கு அருகில் அப்பெண்ணை விட்டுச் சென்றார்.
சந்தேகிக்கும் நபர் புத்தாண்டை கொண்டாடுவதற்கு அப்பெண்ணை திரெங்கானு, பெசுட்டில் உள்ள அவரின் வீட்டிலிருந்து அழைத்து சென்றதாக பாசிர் பூத்தே காவல்துறை அதிகாரி சைசுல் ரிசால் சகாரியா தெரிவித்தார்.
கிடைக்கபெற்ற புகாரை தொடர்ந்து அந்நபர் நேற்று பகாங், பெந்தொங்கில் கைது செய்யப்பட்டதாக சைசுல் ரிசால் கூறினார்.
குற்றவியல் சட்டம் 376 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் விவரித்தார்.








