நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, இனம், மதம் மற்றும் அரச குடும்பம் தொடர்பான 3R உணர்ச்சிகரமான விவகாரங்களைத் தவிர்க்குமாறு வேட்பாளர்களுக்கு போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.
போர்ட் டிக்சன்-இல் செய்தியாளர்களிடம் பேசிய நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அகமது, வெறுப்புணர்வைத் தூண்டும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
மேலும், மாநிலத்திலுள்ள எட்டு வேட்புமனுத் தாக்கல் மையங்களிலும் எந்த அசம்பாவிதங்களும் இன்றி, 2,373 போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்போடு வேட்புமனுத் தாக்கல் அமைதியாக முடிந்துள்ளதாக அவர் தெரிவித்தார். ஆதரவாளர்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்துகொண்டதற்கு அவர் தனது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.








