Aug 10, 2026
Thisaigal NewsYouTube
மாணவனைச் சீனாவிற்கே திரும்பிச் செல்லுமாறு ஆசிரியர் கூறுவதா? கல்வி அமைச்சு விசாரணை
தற்போதைய செய்திகள்

மாணவனைச் சீனாவிற்கே திரும்பிச் செல்லுமாறு ஆசிரியர் கூறுவதா? கல்வி அமைச்சு விசாரணை

Share:

கோலாலம்பூர், மார்ச்.22

இடைநிலைப்பள்ளி ஒன்றில் மலாய் மொழியில் உரையாடுவதில் சிரமத்தை எதிர்நோக்கியிருந்த சீன மாணவன் ஒருவனை, மலேசியாவில் இருந்து போராடுவதை விட சீனாவிற்கே திரும்பிச் செல்லுமாறு கூறியதாகக் கூறப்படும் ஆசிரியர் ஒருவர் தற்போது கல்வி அமைச்சின் விசாரணைக்கு ஆளாகியுள்ளார்.

சம்பந்தப்பட்ட ஆசிரியர், அந்த சீன மாணவனை அவ்வாறு கேட்டுக் கொள்ளும் காட்சியைக் கொண்ட காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இவ்விவகாரம் தற்போது கல்வி அமைச்சின் விசாரணையில் இருந்து வருகிறது.

கற்றல், கற்பித்தல் துறையில் எந்த சூழ்நிலையிலும் இன ரீதியிலான பேச்சுகள் அல்லத் செயல்கள் ஒரு போதும் சகித்துக் கொள்ளப்படாது என்று கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்போது கல்வி அமைச்சு அளவிலான விசாரணை நடைபெற்று வரும் வேளையில் சம்பந்தப்பட்ட சீன மாணவனின் பெற்றோரையும் கல்வி அமைச்சு சந்திக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கற்றல் துறையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், இனத்துவேஷத் தன்மைக்கு உந்தப்படுவார்களேயானால், அவர்களால் எவ்வாறு உளப்பூர்வமான கல்வியை மாணவர்களுக்கு வழங்க முடியும் என்று பலர் கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து