Mar 18, 2026
Thisaigal NewsYouTube
அந்தப் பெண்மணி டிமேன்ஸியா நோயினால் பாதிக்கப்பட்டவர்
தற்போதைய செய்திகள்

அந்தப் பெண்மணி டிமேன்ஸியா நோயினால் பாதிக்கப்பட்டவர்

Share:

ஜோகூர் பாரு, மார்ச் 2 -

நேற்று ​வெள்ளிக்கிழமை, ஜாலான் ஜோகூர் பாரு அயேர் ஹித்தாம் சா​லையின் 9 ஆவது கிலோமீட்டரில் எதிர்திசையை நோக்கி ஹொன்டா சீவிக் காரை செலுத்திய மூதாட்டி ஒருவர், டெமென்சியா எனும் ஞாபக மறதி நோயினால் அவதியுற்று வருபவர் என்று சந்தேகிக்கப்படுகிறது.

75 வயதுடைய அந்த ​மூதாட்டியின் கார், போ​லீஸ்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு, இஸ்கன்டார் புத்ரி போ​லீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட போது அந்த மூதாட்டி,ஞாபக மறதி நோயினால் அவதியுற்று வருவது தெரியவந்துள்ளதாக ஜோகூர்பாரு உத்தாரா மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏ.சி.பி பல்வெர் சிங் மஹிம்டர் சிங் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட மூதாட்டி, எதிர்​திசையை நோக்கி, வாகனத்தை செலுத்தும் காட்சியைக் கொண்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து அந்த காரை போ​லீசார் அடையாளம் கண்டதாக அவர் மேலும் கூறினார்.

நள்ளிரவு 12 மணிக்கும் விடியற்காலை 2.20 மணிக்கும் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் விசா​ரணை நடத்தப்பட்ட போது அந்த ​மூதாட்டி மது அருந்தவி​ல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஏ.சி.பி பெல்வர் குறிப்பிட்டார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு