Sabah, Kampung Lembaga Batu 8 - னில் ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது முதலை தாக்கியதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்தார்.
இன்று மாலை 3.05 மணியளவில் பாதிக்கப்பட்ட 9 வயது Radhi Randi - யின் உடல் அவர் குளித்து கொண்டிருந்த இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைத்தூரதத்தில் கிராம மக்களால் கண்டறியப்பட்டதாக Sandakan தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் தலைவர் Severinus Sainkui கூறினார்.
மேலதிக நடவடிக்கைகளுக்காக பாதிக்கப்பட்ட அச்சிறுவனின் உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் மேலும் அறிவித்தார்.








