கிள்ளான், மே.31-
போர்ட் கிள்ளான் பகுதியில் உள்ள ஶ்ரீ பெரந்தாவ் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே நேற்று சிலதரப்பினரிடையே நடந்த தடியடி தாக்குதல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் நேற்று வைரலான காணொளி ஒன்றில், சிலர், தடிகளைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கும் காட்சிகளும், பலர் அருகில் நின்று அதனை வேடிக்கைப் பார்க்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக மாலை 4 மணியளவில் போலீசாருக்குப் புகார் கிடைத்ததைத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக கிள்ளான் செலாத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் லிம் ஜிட் ஹுயே தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் 18 முதல் 47 வயதிற்க்குட்பட்ட 5 உள்ளூர்வாசிகள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வழக்கானது குற்றவியல் சட்டம் பிரிவு 148-ன் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.








